close
Choose your channels

கேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்த முன்னணி தமிழ் ஹீரோ!

Saturday, August 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் கேரள ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் வரும் காலங்களில் கதையை தேர்வு செய்வேன் என்று கேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகின் இளம் ஹீரோக்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் நடித்த ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ ’ராட்சசன்’ உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் ஹிட்டாகின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் ஒரே நேரத்தில் ‘எம்.ஜி.ஆர் கார்டன்’, ‘மோகன் தாஸ்’ உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்பு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று மலையாள சேனல் ஒன்றில் விஷ்ணு விஷால், அமலா பால் நடித்த ’ராட்சசன்’ திரைப்படம் ஒளிபரப்பானது. மலையாளத்தில் டப் செய்யப்பட்டு ரிலீசான இந்த திரைப்படத்திற்கு கேரள ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர். சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த ஹேஷ்டேக் டிரண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து மகிழ்ச்சி அடைந்த விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் ’என் மீது இவ்வளவு அன்பும் ஆதரவும் காட்டும் கேரள ரசிகர்களுக்கு எனது நன்றி. இனி வரும் காலங்களில் கேரள ரசிகர்களும் ரசித்து பார்க்கும் வகையில் உள்ள கதைகளையே தேர்வு செய்வேன். தற்போது நான் நடித்து வரும் திரைப்படங்களும் அவ்வாறான கதையம்சம் கொண்டவை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து கேரள ரசிகர்கள் விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.