close
Choose your channels

விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவருக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை தெரியுமா

Tuesday, May 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரளாவை சேர்ந்த விஸ்மயா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது கணவர் கிரண்குமார் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவருக்கான தண்டனை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த விஸ்மயா என்பவர் கிரண்குமார் என்பவரை திருமணம் செய்த நிலையில் திருமணமான ஒரே ஆண்டில் வரதட்சனை கொடுமை காரணமாக விஸ்மயா தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் கணவர் கிரண்குமார் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் கிரண்குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு என்ன தண்டனை என்பது இன்று அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.