close
Choose your channels

விசுவின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Friday, November 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் இயக்குனர், நடிகர் விசு கடந்த மார்ச் மாதம் காலமான நிலையில் அவரது இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

விசு நடித்து இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்ற திரைப்படம் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தேசிய விருது, பிலிம்பேர் விருதையும் பெற்றது. இந்த நிலையில் தற்போது விசுவின் மரணத்திற்கு பின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இயக்குனர்‌ விசு எழுதி இயக்கிய ஏவிஎம்‌ சம்சாரம்‌ அது மின்சாரம்‌: தேசிய விருது பெற்ற மாபெரும்‌ வெற்றி படம்‌. நீண்ட இடைவெளிக்கு பிறகு மறைந்த இயக்குனர்‌ விசு அவர்கள்‌ கடைசியாக கதை திரைக்கதை வசனம்‌ எழுதியுள்ள சம்சாரம்‌ அது மின்சாரம்‌ 2' அவரின்‌ லட்சிய படைப்பு. இப்படத்தை “மக்கள்‌ அரசன்‌ பிக்சர்ஸ்‌” நிறுவனர்‌ திரு.ராஜா அவர்கள்‌ தயாரிக்கிறார்‌. இந்நிறுவனம்‌ விமல்‌ நடிக்கும்‌ “எங்கள்‌ பாட்டன்‌ சொத்து”, விதார்த்‌, யோகிபாபு நடிக்கும்‌ “உலகமகா உத்தமர்கள்‌”, பா.விஜய்‌ இயக்கத்தில்‌ ஜீவா அர்ஜுன்‌ நடிக்கும்‌ “மேதாவி” போன்ற படங்களை தயாரித்து வருகிறது.

சம்சாரம்‌ அது மின்சாரம்‌ - 2 திரைப்படத்தை விசுவின்‌ சிஷ்யன்‌ வி.எல்‌.பாஸ்கர்ராஜ்‌ இயக்குகிறார்‌. இவர்‌ ராஜ்‌ டிவியில்‌ அகடவிகடம்‌ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்‌. இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையும், பா விஜய் பாடல்களும்ம், ராஜவேல் மோகன் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர். மேலும் இந்த படத்தின் உதவி வசனகர்த்தாவாக விசுவின்‌ மகள்‌ லாவண்யா விசு பணியாற்றுகிறார்‌. இதில்‌ முக்கிய கதாபாத்திரத்தில்‌ நடிக்க திரு.ராஜ்கிரண்‌ வசம்‌ பேசப்படுகிறது. மற்ற நட்சத்திர தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. “சம்சாரம்‌ அது மின்சாரம்‌ - 2: திரைப்படத்தின்‌ கதையை பற்றி இயக்குனர்‌ பாஸ்கர்ராஜ்‌ கூறுகையில்‌, ‘இது சிறுவர்கள்‌, இளைஞர்கள்‌, பெரியவர்கள்‌, அனைவரும்‌ ரசிக்ககூடிய கதம்பமான ஒரு குடும்ப கதை. அனைத்து தரப்பட்ட மக்களையும்‌ திரையரங்கு நோக்கி வரவழைக்கும்‌ இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.