'விஸ்வரூபம் 2' படத்திற்கு பிறந்த விடிவுகாலம்

  • IndiaGlitz, [Monday,September 21 2015]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள 'தூங்காவனம்' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த மூன்று வருடங்களாக கிடப்பில் இருக்கும் விஸ்வரூபம் 2' படத்திற்கும் தற்போது ஒரு விடிவுகாலம் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

'விஸ்வரூபம் 2' படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுடன் கமல் தரப்பினர் பேசி வருவதாகவும், விரைவில் இந்த படம் கமல் தயாரிப்பு நிறுவனமான 'ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு கைமாறும் என கூறப்படுகிறது. ஏற்கனவே 'விஸ்வரூபம்' முதல் பாகத்தின் படப்பிடிப்பின்போதே இரண்டாவது பாகத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதால், படம் கைமாறியதும் விறுவிறுப்பாக மீதி படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, வரும் 2016ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசனுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல்போஸ், சேகர் கபூர், ஆனந்த் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கமல்ஹாசனே இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

நடிகர் சங்க தேர்தல்: வெளியூர் உறுப்பினர்களுக்கு தபால் ஓட்டு வசதி.

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்களில் முன்னிலையில் நடைபெறவுள்ளது....

முதல்முறையாக வர்த்தக விளம்பர படத்தில் கமல்ஹாசன்?

கோலிவுட்டில் ஒருசில வெற்றி படங்கள் கொடுத்த நடிகர்கள் கூட விளம்பரப்படத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்து வரும் நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் இதுவரை எந்த நிறுவனத்தின் விளம்பர படங்களிலும் நடிக்காமல் இருந்தார்......

அதெல்லாம் ஒண்ணுமில்லை சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டது குறித்து கமல்

நடிகர் சிவகார்த்திகேயனை மதுரை விமான நிலையத்தில் நேற்று கமல்ஹாசன் ரசிகர்கள் தாக்கியதாக சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் தகவல்கள் வெளிவந்தது.....

ரஜினியின் 'கபாலி'யில் இணைந்த 'மெட்ராஸ்' நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த விநாயகர் சதூர்த்தி தினத்தன்று பூஜையுடன் தொடங்கியது என்பது அனைவரும் அறிந்ததே.....

வெற்றிமாறனின் 'விசாரணை'க்கு இயக்குனர் விஜய் பாராட்டு

தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் குறித்து பத்திரிகையாளர்களுக்கான அறிக்கை ஒன்றை பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:....