தல அஜித்தின் விவேகம்: கபிலன் வைரமுத்துவின் 'காதலாடா' பாடல் வரிகள்

  • IndiaGlitz, [Friday,July 21 2017]

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தில் இடம்பெற்ற 'சர்வைவா' மற்றும் 'தலை விடுதலை' ஆகிய பாடல்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளிவந்து அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களின் மாபெரும் ஆதரவை பெற்றது.

இந்த நிலையில் 'வேதாளம்' படத்தை அடுத்து மீண்டும் இணைந்துள்ள அஜித்-அனிருத்-சிவா கூட்டணியில் உருவான 'விவேகம்' படத்தின் 3வது பாடலான 'காதலடா' என்று தொடங்கும் பாடல் நேற்று மதியம் வெளியாகி மீண்டும் இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. கபிலன் வைரமுத்துவின் வரிகளில் உருவான இந்த பாடலை அனிருத், சாஷா திருப்பதி, பிரதீப் குமார் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த நிலையில் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ள இந்த பாடலின் வரிகளை தற்போது பார்ப்போம்.

உன்னோடு வாழ்வது ஆனந்தமே..

ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே..

தீராத தேவைகள் ஆனந்தமே..

இல்லைகள் இங்கில்லை பேரின்பமே..

பல்லவி

காதலாட காதலாட காத்திருந்தேனே..

ஆசை நூலில் பாச பூக்கள் கோர்த்திருந்தேனே..

செய்யாத மாதவம் நீயே

பொய்யாத பேரருள் நீயே

ஓயாத தேன்மழை அதை ஏந்தவே புது பூமி செய்வோமே...

சரணம்

நீலவானம் மாய்ந்த போதும்

நீ இருப்பாயே...

தேவகானம் தூய மெளனம்

நீ கொடுப்பாயே...

பொல்லாத போர்களில் உன் வேர்வையாக பூத்திருப்பேனே..

நில்லாத ஓடையாய் உன் கைபிடித்து ஓடுகின்றேனே..

ஆலகால நஞ்சு பாய்ந்தது

மெல்ல மீள்வோமே..

பிள்ளை தெய்வம்

மண்ணில் தோன்றிட

வாழ்வு நீள்வோமே..