5 டிகிரி குளிரில் அசால்ட்டாக சட்டையை கழற்றிய அஜித்: விவேக் ஓபராய் ஆச்சரியம்

  • IndiaGlitz, [Wednesday,July 19 2017]

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 97% வெளிநாட்டில் படமாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக பல்கேரியாவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றபோது மைனஸ் 5 டிகிரி வெப்பநிலை இருந்ததாம்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள விவேக் ஓபராய், 'பல்கேரியாவில் மைனஸ் 5 டிகிரி வெப்பநிலையில் படப்பிடிப்பு நடந்தபோது அனைவரும் சட்டைக்கு மேல் சட்டை போட்டிருந்தும் நடுங்கி கொண்டிருப்போம். ஆனால் அந்த குளிரில் அஜித் அசால்ட்டாக சட்டையை கழற்றிவிட்டு வெற்றுடம்புடன் சில காட்சிகள் நடித்தபோது அவருடைய டெடிகேஷன் மற்றும் கன்விக்ஷனை பார்த்து ஆடிப்போய்விட்டேன். இப்படி ஒரு நபரை நான் இதுவரை சந்தித்ததே இல்லை' என்று கூறினார்.

மேலும் 'விவேகம்' போன்று அழுத்தமான கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து தமிழில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தமிழகத்திற்கு தனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறிய விவேக், தன்னுடைய தாயார் கோவையை சேர்ந்தவர் என்றும் கூறினார்.

More News

கமல்ஹாசன் மூன்றாம் தர நடிகரா? தமிழக அமைச்சர்களுக்கு சின்மயி சரமாரி கேள்விகள்

சும்மா இருக்கற சிங்கத்தை சீண்டி பாத்தா இதுதான் கதி என்ற கதையாகிவிட்டது கமல்ஹாசனின் விஷயம்.

கமல் மக்களுக்கு என்ன செய்தார்? அரசியலுக்கு வர நினைப்பது ஏன்? தமிழிசை கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக சூசகமாக அறிவித்தபோது அரசியல்வாதிகளில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது கமல்ஹாசனின் அரசியல் வருகையையும் அவர்கள் எதிர்க்க தயாராகிவிட்டனர்...

கமல்ஹாசனுக்கு ஆதரவளித்த தந்தையும், மகனும்!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சமீபகாலமாக தமிழக அரசு குறித்து வெளியிட்ட தைரியமான விமர்சனங்களால் ஆத்திரம் அடைந்த ஆட்சியாளர்கள் அவரை மிரட்டும் தொனியில் நடந்து வருகின்றனர்

கமலின் தமிழ் கவிதையை மொழி பெயர்த்த கஸ்தூரி

உலக நாயகன் கமல்ஹாசன் தமிழின் மீது அளவில்லா காதல் கொண்டவர் என்பதும் அவருடைய பேச்சும், எழுத்தும் சுத்த தமிழில் இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஹவுஸ் ஓனராக' மாறிய பெண் இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் பெண் இயக்குனர்கள் அரிதாகவே இருக்கும் நிலையில் குணசித்திர நடிகையாகவும் இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன்...