இசை மேதையுடன் எஸ்பிபி: அரிய புகைப்படத்தை வெளியிட்ட விவேக்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான நிலையில் அவருடைய நினைவைப் போற்றும் வகையில் அவருடன் பழகிய நாட்கள், பகிர்ந்த அனுபவங்களை திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பகிர்ந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் நடிகர் விவேக், எஸ்பிபி மற்றும் இசை மேதை எம்எஸ் விஸ்வநாதன் ஆகிய இருவரும் இணைந்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். எம்.எஸ்.வி மற்றும் எஸ்பிபி ஆகிய இரு இசை மேதைகளும் தண்டவாளத்தில் உட்கார்ந்துகொண்டு சிரித்தபடியே இருக்கும் இந்த புகைப்படம் இதுவரை பலர் பார்த்திராத அரிய புகைப்படம் என்றும் இந்த புகைப்படத்தை பதிவு செய்ததற்காக எஸ்பிபி மற்றும் எம்எஸ்வி ரசிகர்கள் விவேக்கிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த பதிவில் நடிகர் விவேக், ‘இந்த விரலில் விளைந்த மெட்டுக்கள்!அந்தக் குரலில் குழைந்த பாட்டுக்கள்! இந்தப் பயணம் முடிவதில்லை: இசையின்றி நாட்கள் விடிவதில்லை! என்று குறிப்பிட்டுள்ளார்.  

எம்எஸ் விஸ்வநாதன் இசையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடிய பல பாடல்கள் காலத்தால் அழியாத காவிய பாடல்கள் என்பதும், அந்த பாடல்கள் இன்றும் அனைவரின் மனதில் குடியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.