நதிகள் இணைப்பிற்காக விவேக் எழுதிய 'ஆலுமா டோலுமா' பாடல்

  • IndiaGlitz, [Monday,September 11 2017]

நதிகள் இணைப்பு குறித்து தற்போது பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சி அதிகமாகி வரும் நிலையில் திரையுலக பிரமுகர்களும் நதிகள் இணைப்பிற்கு சமீபகாலமாக குரல் கொடுத்து வருகின்றனர். நேற்று கூட நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுத்ததை பார்த்தோம்

இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக், அஜித்தின் 'வேதாளம்' படத்தில் இடம்பெற்ற 'ஆலுமா டோலுமா' பாடலின் மெட்டில் நதிகள் இணைப்பு குறித்த பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார். அந்த பாடல் இதோ:

ஆறுமா ஆறுமா ஆறுபோல யாரும்மா
ஆறெல்லாம் காய்ஞ்சு போனா நமக்கு ஏது சோறுமா?

ஊறுமா ஊறுமா கிணத்தில் தண்ணி ஊறுமா?
ஏரியும் குளங்களும் தான் எப்பவாச்சும் நிரம்புமா?

மிரட்டினா உருட்டினா மேகம் மழை பொய்யுமா?
மரத்தெல்லாம் வெட்டிப்புட்டா நம்மல வைச்சு செய்யுமா?

கங்கையில் முங்கினா பாவமெல்லாம் தொலையுமா?
கங்கையே தொலைஞ்சிட்டா நீயும் எங்க போவம்மா?

More News

தமிழிசையை விமர்சிக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு சூரியா ரசிகர்கள் மன்றம் வேண்டுகோள்

தமிழிசை அவர்களை விமர்சிக்க வேண்டாம் என்று சூர்யா ரசிகர் மன்றத்தின் சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

வாழ்த்து சொன்ன பிரபல நடிகரை வறுத்தெடுத்த ரஞ்சித்

சமீபத்தில் நீட் தேர்வை எதிர்த்து தன்னுடைய இன்னுயிரை நீத்த அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று இயக்குனர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது என்பதை பார்த்தோம்.

ரஜினியின் அடுத்த சமூக சிந்தனையுடன் கூடிய வாய்ஸ்

பணமதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டு, நீட், அனிதா மரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தனது டுவிட்டரில் வாய்ஸ் கொடுத்த ரஜினிகாந்த் தற்போது நதிகள் இணைப்பிற்காக மீண்டும் வாய்ஸ் கொடுத்துள்ளார்.

விஜய்சேதுபதி, ஜோதிகாவுடன் இணைந்த சிம்பு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஏற்கனவே நட்சத்திர கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரான சிம்பு இணைந்துள்ளார்.

முன்னணி தமிழ் நடிகர்களுக்கு சமமானவர் மகேஷ்பாபு: கலைப்புலி எஸ்.தாணு

நேற்று சென்னையில் நடைபெற்ற 'ஸ்பைடர்' இசை வெளியீட்டு விழாவில் கோலிவுட்டின் பல பிரமுகர்கள் மகேஷ்பாபுவின் தமிழ் எண்ட்ரிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.