மதுரை ராமு தாத்தாவுக்கு புகழாராம் சூட்டிய விவேக்!

  • IndiaGlitz, [Sunday,July 12 2020]

மதுரையில் ராமு தாத்தா ஹோட்டல் என்றால் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். மிக குறைந்த விலையில் தரமான உணவை அந்த பகுதி மக்களுக்கு அவர் அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மதுரை ராமு தாத்தாவின் ஓட்டலில் சாதம், சாம்பார், ரசம், மோர், ஊறுகாய் உடன் கூடிய சாப்பாடு வெறும் 10 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 3 இட்லி பத்து ரூபாய், பொங்கல் பத்து ரூபாய், தோசை பத்து ரூபாய், வடை ஐந்து ரூபாய் என மிக குறைந்த விலையில் தரமான உணவை கடந்த பல ஆண்டுகளாக அவர் வழங்கி வருகிறார்

இந்த நிலையில் மதுரை ராமு தாத்தா இன்று வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது மறைவு மதுரை மக்களையே மிகப்பெரிய அளவில் சோகத்திற்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் மதுரை ராமு தாத்தா மறைவு குறித்து நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

மதுரை ராமு தாத்தா! உங்கள் உடல் மரிக்கலாம்; நீங்கள் போட்ட உணவு செரிக்கலாம்; ஆனால் உங்கள் நினைவு பசியாறியவர் நெஞ்சில் நீங்காமல் நிலைக்கும்! (17 வயதில் வடலூர் வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு இவ்வாறு வாழ்ந்திருக்கிறார்) தன் தொழிலை சேவையாக மாற்றும் அனைவரும் தெய்வங்களே!!! வீரமும் ஈரமும் நிரம்பிய மண் அல்லவா மதுரை!’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

திரைக்கதையின் இலக்கணத்தையே மாற்றியது: அஜித் படம் குறித்து இயக்குனர் திரு!

அஜித் தேவயானி நடிப்பில் அகத்தியன் இயக்கத்தில் தேவா இசையில் தங்கர்பச்சான் ஒளிப்பதிவில் உருவான திரைப்படம் 'காதல் கோட்டை'. கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்திற்காக

சென்னையில் குறைந்து, மற்ற மாவட்டங்களில் உயரும் கொரோனா: பரபரப்பு தகவல்

கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் மற்ற மாவட்டங்களில் அதிகரித்து கொண்டே வருவது கவலை அளித்துள்ள நிலையில் இன்றும் சென்னை தவிர பிற மாவட்டங்களில்

கமல், ரஜினியை அடுத்து ரூ.2 லட்சம் பொன்னம்பலத்திற்கு கொடுத்து உதவிய பிரபலம்

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பொன்னம்பலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை மருத்துவமனை

என் தனிப்பட்ட இழப்பும் கூட: மேஜர்தாசன் மறைவு குறித்து கமல்ஹாசன்

தமிழ் திரையுலகின் மூத்த பத்திரிகையாளர் மேஜர்தாசன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம். அவருடைய மறைவு பத்திரிகையுலகிற்கு மட்டுமின்றி தமிழ் திரையுலகிற்கே மிகப்பெரிய

எப்பொழுதும் பாடல்களில் அவர் தான் ராஜா: நா முத்துகுமார் மகனின் கவிதை

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான நா.முத்துகுமார் கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அவரது பிறந்த நாள் இன்று திரையுலகினர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.