close
Choose your channels

விவேக் மரணத்திற்கு பின் அவரது மனைவி அருள்செல்வியின் முதல் செய்தியாளர் சந்திப்பு!

Sunday, April 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விவேக் நேற்று காலமான நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தநிலையில் விவேக்கின் மனைவி அருள்செல்வி, கணவரின் மறைவிற்கு பின் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

என் கணவரை நான் இழந்து நிற்கும் இந்த நேரத்தில் எங்கள் குடும்பத்திற்கு பக்கபலமாகவும் ஒரு மிகப்பெரிய துணையாகவும் நின்ற மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றி.

என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. அதை என்றும் நன்றியோடு நினைத்துப் பார்ப்போம், நீங்கள் கொடுத்தது என் கணவருக்கு மிகப்பெரிய கவுரவம். அடுத்து காவல்துறை சகோதரர்களுக்கு மிக்க நன்றி. கடைசி வரைக்கும் நீங்கள் எங்களுடன் நின்றீர்கள், ரொம்ப ரொம்ப நன்றி. ஊடகத்துறையில் இருக்கும் சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றி. நேற்று என் கணவரின் இறுதி ஊர்வலத்தில் கடைசி வரைக்கும் வந்த அவருடைய கோடான கோடி ரசிகர்களுக்கு என்றும் எங்கள் நன்றி’ என விவேக் மனைவி அருள்செல்வி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.