நள்ளிரவில் கைதான நடிகை சித்ரா கணவர்: தற்கொலைக்கான காரணம் கண்டுபிடிப்பு?

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த வழக்கில் அவரது கணவர் ஹேமந்த் நேற்று நள்ளிரவு திடீரென கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நாசரேத்பேட்டை அருகே உள்ள ஒரு விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது

இதனையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேமந்த் என்பவர் மீது கடந்த 5 நாட்களாக விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையில் சித்ராவின் நடத்தையில் அவர் சந்தேகப்பட்டது தெரியவந்துள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகத்தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது

இதனை அடுத்து நசரத்பேட்டை போலீசார் நேற்று இரவு ஹேமந்தை கைது செய்து அவர் மீது 306 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சித்ராவின் தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சித்ராவின் தாய், தந்தை, சகோதரர் மற்றும் அவர் கடைசியாக நடித்த தொலைக்காட்சி தொடரின் குழுவினர்கள் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட பலரிடமும் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது