close
Choose your channels

இரண்டே நாளில் தூய்மை பணியாளர்களுக்கு தோழியாகிய பிரபல விஜே

Tuesday, April 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தன்னலம் கருதாது பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்களுக்கு அவர்களுடைய உழைப்பிற்கேற்ற மரியாதை கிடைத்து வருகிறது என்பதும் பலரும் அவர்களுக்கு உதவி செய்வதோடு தன்னலம் கருதாத அவர்களுடைய பணியை பாராட்டி வருகின்றனர் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்,

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி விஜே மணிமேகலை, தன்னுடைய சமூக வலைத்தளத்தில், தான் தங்கியிருக்கும் கிராமத்தில் தூய்மை பணியாளர்களுடன் இரண்டே நாட்களில் தோழி ஆகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நான் தங்கியிருக்கும் கிராமத்தில் தூய்மை பணியாளர்களுடன் இரண்டே நாள் பழக்கத்தில் தோழி ஆகிவிட்டேன். இவ்வளவு வெயில் இருந்தாலும் இந்த நேரத்தில் இவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்வதை பார்த்து அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை வந்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் மரியாதை செய்ய வேண்டிய நேரமிது என்று குறிப்பிட்டுள்ளார்

விஜே மணிமேகலை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கொரோனா விடுமுறையில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.