'தெறி'யாக வைக்கப்பட்டுள்ள விஜய் கேரக்டரின் பெயர்

  • IndiaGlitz, [Wednesday,January 13 2016]

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து வரும் நிலையில் அவருடைய கேரக்டரின் பெயர் தற்போது தெரியவந்துள்ளது.

'தெறி' படத்தில் A.விஜயகுமார் ஐ.பி.எஸ். என்ற கேரக்டரில் விஜய் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜயகுமார் பெயரில் தமிழகத்தில் கம்பீரமான ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி இருந்த நிலையில் விஜய் நடிக்கும் கேரக்டருக்கும் அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் நடந்து கொண்டிருப்பதாகவும், தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகும் வகையில் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் திட்டமிட்டபடி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

More News

'விஜய் 60' படத்தில் நடிப்பது குறித்து மியா ஜார்ஜ் கூறிய முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 60' படத்தில் 'அமரகாவியம்'...

மியா ஜார்ஜை அடுத்து 'விஜய் 60'-ல் இணையும் இன்னொரு நடிகை

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் விஜய்யின் 60வது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது....

காமெடி ஹீரோவுக்கு காமெடியனாக நடிக்கும் கருணாஸ்

ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படத்தில் சந்தானம், கருணாஸ் இருவருமே நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தனர்....

2.0 படத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை வரும். அக்சயகுமார் அதிர்ச்சி கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் '2.0'....

'பசங்க 2' படத்திற்கு பசங்களை அழைத்து செல்லும் பள்ளிகள்

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான 'பசங்க 2' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் ஆதரவால் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது....