திடீரென ரஜினியை சந்தித்த சசிகலா: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Tuesday,December 07 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சசிகலா நேற்று மாலை அவருடைய வீட்டில் சந்தித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் ரஜினிகாந்தை அவருடைய வீட்டிற்குச் சென்று சசிகலா சந்தித்தன் காரணம் என்ன என்பது குறித்து சசிகலா தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: புரட்சித் தாய் சின்னம்மா அவர்கள் நேற்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்குச் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது அவருடைய மனைவி திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களும் உடன் இருந்தார்கள்.

திரு ரஜினிகாந்த் அவர்கள் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது முற்றிலுமாக குணமடைந்து வந்துள்ளதை அறிந்த நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய உடல் நலனைப் பற்றியும் கேட்டறிந்தார். மேலும் திரு ரஜினிகாந்த் அவர்கள் கலை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு தனது நெஞ்சம் இருந்த வாழ்த்துக்களையும் புரட்சித் தாய் சின்னம்மா அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

More News

வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த பிரபல நடிகர்!

பிரபல நடிகர் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடி வழங்கியுள்ள செய்தி சற்று முன் வெளியாகியுள்ளது. 

ரூ.50 கோடியை நெருங்கும் 'மாநாடு' வசூல்: சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதேபோல் வசூல் அளவிலும் இந்தப்படம்

ரஜினிக்கு இந்த தைரியம் இருக்குதா? பிரபல இயக்குனர் கேள்வி!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இருக்கும் தைரியம் ரஜினிகாந்துக்கு இருக்கின்றதா? என பிரபல இயக்குனர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிக்பாஸ் வீட்டிற்குள் அரசியல் கட்சிகள்: அமர்க்களமாகும் மாநாடு!

மற்ற சீசன்களை விட பிக்பாஸ் சீசன் 5 வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது என்பதும் இந்த சீசனில் அணியாக யாரும் விளையாடாமல் தனித்தனியாக விளையாடி

'வெந்து தணிந்தது காடு': அட்டகாசமான ஸ்டில் வெளியிட்ட சிம்பு!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்ற நிலையில் அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் அடுத்த படமான 'வெந்து தணிந்தது காடு'