close
Choose your channels

கஜா புயல்: களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம்

Thursday, November 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் இன்று இரவு கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த புயலினால் ஏற்படும் சேதங்களை சந்திக்க அரசு மற்றும் சமூக ஆர்வல அமைப்புகள் தயார் நிலையில் உள்ளது.

தேசிய பேரிடர் குழுவினர் புயலினால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய தயார் நிலையில் உள்ளனர். மேலும் பல்வேறு தனியார் அமைப்புகளும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களை தங்க வைப்பது, அவர்களுக்கு உணவு உள்பட அத்தியாவசிய தேவைகளை தயார் செய்வது போன்ற பணிகளில் தீவிரமாக உள்ளனர்.

இந்த நிலையில் கஜா புயல் மீட்பு பணியில் தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கமும் களமிறங்கியுள்ளது. நாகை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மீட்பு குழுவிற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு நாகை மாவட்ட மக்கள் தாலுகா வாரியாக கொடுக்கப்பட்டுள்ள எண்ணை பயன்படுத்தி தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.