'விண்ணை தாண்டி வருவாயா' மேஜிக் 'தக்லைஃப்' படத்தில் நடந்துருக்கு: த்ரிஷா


Send us your feedback to audioarticles@vaarta.com


கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக்லைஃப்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷா "'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்திற்கு பிறகு சிம்புவுடன் நான் இந்த படத்தில் நடித்துள்ளேன். அந்த மேஜிக் இந்த படத்திலும் இருக்கிறது," என்று குறிப்பிட்டார். இதனால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் த்ரிஷா பேசும் போது, ‘தக்லைஃப்’ படத்தில் நடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் ஆசையாக இருந்தது. அதே போல் எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்த மேடையில் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது," என்று தெரிவித்தார்.
"'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்திற்கு பிறகு சிம்புவுடன் எப்போது நடிக்கப் போகிறோம் என்று பலரும் கேட்டிருந்தார்கள். இந்த படத்தில் அந்த மேஜிக் நடந்திருக்கிறது," என்றும் கூறினார்.
மேலும், "நானும் அபிராமியும் நல்ல நண்பர்கள். இருவரும் சேர்ந்து இந்த படத்தில் நடித்திருக்கிறோம்," என்றும் அவர் தெரிவித்தார்.
"‘ஆயுத எழுத்து’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் மணிசார் இயக்கத்தில் நான் ஏற்கனவே நடித்திருக்கிறேன். எனக்கு ரொம்ப பிடிச்ச இயக்குனர். அதேபோல் கமல் சார் கூடவும் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். நிறைய லெஜெண்ட்ஸ் கூட நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கு," என்றார்.
ஜூன் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகுது. எல்லோரும் தியேட்டரில் பாருங்கள். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்," என்று நடிகை த்ரிஷா உரையாற்றினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments