close
Choose your channels

சுக்கு நூறாக இடிந்து விழுந்த சிறைச்சாலை.... கைதிகள் படுகாயம்!

Saturday, July 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டச் சிறைச்சாலையில் இன்று அதிகாலை இடிந்து விழுந்த சுவரால் 22 கைதிகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒரு கைதி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்துவருகிறது. இப்படி பெய்த கனமழையால் பிந்த் மாவட்டத்தில் உள்ள பழமையான சிறைக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்திருக்கிறது. இதனால் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே 22 கைதிகள் சிக்கிக்கொண்டு படுகாயம் அடைந்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இதில் ஒரு கைதி உயிருக்கு ஆபத்தான நிலையில் குவாலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று அதிகாலை 5.10 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தால் கைதிகள் யாரும் தப்பித்துச் செல்லவில்லை என்பதையும் சிறை நிர்வாகம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.