துப்புரவு பணியாளர்களுக்கு 'பாகுபலி 2' பட டிக்கெட்டுக்களை கொடுத்த கலெக்டர்

  • IndiaGlitz, [Thursday,April 27 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் வெளிநாடுகளில் இந்த படத்தின் முதல் காட்சி தொடங்கவுள்ள நிலையில் கட்டப்பா ரகசியம் வெகுவிரைவில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'பாகுபலி 2' படத்தை பார்ப்பதற்காக பலர் அலுவலகங்களுக்கு விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளிவந்துள்ளது. இவர்களில் ஒருவர் காவல்துறையை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்ட ஆட்சியர் அமர்பளி கட்டா என்பவர் வாரங்கல் மாவட்டத்தை அழகாகவும் தூய்மையாகவும் பாதுகாத்து வரும் அதிகாரிகளையும், துப்புரவுப் பணியாளர்களையும் பாராட்டும் வகையில் 'பாகுபலி 2' திரைப்படத்தை மிகப்பெரிய மல்டி-ப்ளெக்ஸ் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியை காண இலவச டிக்கெட்டுக்களை கொடுத்துள்ளார். இந்த டிக்கெட்டுக்களின் மதிப்பு ஒவ்வொன்றும் ரூ.500 என்பது குறிப்பிடத்தக்கது.

துப்புரவு பணியாளர்களின் உழைப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த பரிசை கொடுத்ததாக கலெக்டர் கூறியுள்ளார்.

More News

மகாபாரதத்துடன் கனெக்சன் ஆன அஜித்தின் 'விவேகம்'

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் தற்போது நடைபெற்று வருகிறது. அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் அஜித் பிறந்த நாளுக்கு முன் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

பிரபல பாலிவுட் நடிகர் -அரசியல்வாதி திடீர் மரணம்

பாலிவுட்டின் பிரபல நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி வினோத்கண்ணா சற்று முன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70...

புதிய ரூபாய் நோட்டுக்களில் நோட்டுக்களில் எழுதியிருந்தால் செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்

புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்களில் பேனா அல்லது பென்சிலால் ஏதாவது எழுதியிருந்தாலோ அல்லது கிறுக்கியிருந்தாலோ அந்த நோட்டு செல்லாது என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சற்று முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது....

சென்னை மின்வெட்டுக்கு தமிழக அரசின் கடன் பாக்கி காரணமா?

தமிழகத்தின் தலைநகரான சென்னையின் பெரும்பாலான பகுதிகள் நேற்று இரவு மின்சாரம் தடை பட்டதால் இருளில் மூழ்கியது. கோடை வெப்பத்தால் இரவு முழுவதும் புழுக்கத்தின் காரணமாக சென்னை மக்கள் தூங்க முடியாமல் தவித்தனர். இந்த மின் தடைக்கு 'உயர் மின் அழுத்தப் பாதையில் ஏற்பட்ட பழுதே காரணம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்...

'தல' தோனியை ஏலத்தில் வாங்க எதையும் விற்க தயார். ஷாருக்கான்

கிரிக்கெட் உலகின் 'தல' தோனி அடுத்த வருடம் முதல் மீண்டும் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே ரசிகர்களும் தோனியை வரவை எதிர்நோக்கி சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்...