ருதுராஜ் கெயிக்வாட்க்கு வாய்ப்புக் கொடுக்காதீங்க… திடுக்கிட வைத்த முன்னாள் வீரர்!

முன்னணி பேட்ஸ்மேனான ருதுராஜ் கெயிக்வாட் தனது வாய்ப்புக்காக தொடர்ந்து காத்துக்கொண்டிருக்கிறார். இப்படியிருக்கும்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் ருதுராஜ் கெயிக்வாட்டுக்கு மட்டும் வாய்ப்புக் கொடுக்காதீங்க எனக் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் அணி மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் முதல் இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளனர். தொடர்ந்து 3 ஆவது போட்டி நடைபெறவிருக்கும் நிலையில் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் பயோபபுள் முறையில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்களது சொந்த காரணங்களாக வெளியேறி இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்திய அணியில் மீண்டும் பிளேயிங் 11 பற்றிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

இதையடுத்து நல்ல ஃபார்மில் இருக்கும் ருதுராஜ் கெயிக்வாட் மீது பலரது கண்கள் மொய்க்க ஆரம்பித்து இருக்கின்றன. ஆனால் ருதுராஜ் கெயிக்வாட்டை எடுக்க வேண்டாம் என்றும் ஒரு போட்டிக்காக அவரைத் தேர்வு செய்யும்போது அழுத்தம் அதிகமாகும் என்றும் அவர் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கட்டும் என்றும் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். இந்தக் கருத்து ஏற்புடையதாக இருந்தாலும் ருதுராஜ் கெயிக்வாட் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? என்ற கேள்வியையும் ரசிகர்கள் கேட்க துவங்கியுள்ளனர்.

முன்னதாக நியூசிலாந்து போட்டிகளின்போது கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் இருவரும் ஓப்பனராக செயல்பட்டனர். அடுத்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் மற்றும் தவான் இருவரும் ஓப்பனராக இருந்தனர். தொடர்ந்து மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கு இஷான் கிஷனும் ரோஹித்தும் ஓப்பனராக இருந்துவரும் நிலையில் ருதுராஜ் கெயிக்வாட்டை எப்படி ஓப்பனராக இறக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்து ஒரு போட்டிக்காக ருதுராஜ் கெயிக்வாட்டுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டால் அது அவருடைய பேட்டிங் ஸ்டைலேயே மாற்றிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால்தான் ஓப்பனராக இறங்கும் வாய்ப்பு கிடைக்கும்வரை காத்திருக்க வேண்டும் என்று வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

மேலும் பயிற்சியாளர் டிராவிட்டும் இதே கருத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவர் ரோகித்தையும் இஷான் கிஷனையும் ஓப்பனராக இறக்கிவிட்டு முதல் விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் ஐயரை இறக்கிவிடலாம் என்ற முடிவில் இருப்பதாகக் கணிக்கப்பட்டு இருக்கிறது.

More News

கமல் இனி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரமாட்டாரா? என்ன காரணம்?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 5 சீசன்களை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது தெரிந்ததே.

கீர்த்தி சுரேஷூக்காக களமிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், த்ரிஷா, சமந்தா!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசைப்புயல் ஏஆர் ரகுமான், நடிகைகள் த்ரிஷா மற்றும் சமந்தா ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்

ரஜினி குடும்பமே இன்னும் ஓட்டு போடவில்லையா? என்ன காரணம்?

ஒவ்வொரு தேர்தலிலும் காலை 7 மணிக்கு முதல் நபராக வந்து ஓட்டு போடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்னும் ஓட்டு போடவில்லை

'அரபிக்குத்து' பாடலுக்கு வரலட்சுமி யாருடன் டான்ஸ் ஆடுகிறார் பாருங்கள்: வீடியோ வைரல்

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து'பாடல்  கடந்த 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியான நிலையில் இந்த ஐந்து நாட்களில் இந்த பாடலுக்கு நடனம் ஆடாத பிரபல

சில முட்டாள்கள் 2000 ரூபாய்க்காக இதை செய்துள்ளனர்: சன்னிலியோன் ஆத்திரம்

சில முட்டாள்கள் 2000 ரூபாய்க்காக என்னுடைய பான் கார்டை பயன்படுத்தி மோசடி செய்து உள்ளார்கள் என கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஆத்திரத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது