ஆஸ்திரேலியாவை அலற வைத்த ஒரு கேட்ச்… வைரல் வீடியோ!!!

 

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடன் 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளை முடித்துக் கொண்டு தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒரு நாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த இந்திய அணி அதை ஈடுகட்டும் விதமாக டி20 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியுடன் வெற்றிப் பெற்றது.

அதைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அந்நாட்டின் அடிலெய்டு நகர ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை நிதானமாக எதிர்க்கொண்ட இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. இதில் விராட் கோலி 74 ரன்களை எடுத்து அவுட்டானார்.

இந்நிலையில் 2 ஆவது நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அதில் இந்திய அணி 11 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை விளையாட ஆரம்பித்தது. இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை எதிர்க்கொண்ட ஆஸ்திரேலிய அணி 65 ரன்கள் எடுத்திருந்த போதே 4 விக்கெட்டுகளை இழக்க வேண்டிவந்தது. ஆஸ்திரேலிய அணியின் 6 ஆவது விரராக களம் இறங்கிய கேமரூன் கீரின் விக்கெட்டை ரவிசந்திரன் அஸ்வின் வீழ்த்தினார். அஸ்வின் பந்தை தூக்கி அடிக்க கேமரூன் முயன்றார். அந்த பந்தை பாய்ந்து பிடித்து விராட் கோலி மாஸ் காட்டினார். இந்தப் போட்டியில் இந்திய அணி 62 ரன்களுடன் முன்னிலை பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நான் ஏமாந்தது போல் எந்த பெண்ணும் ஏமாந்துட வேண்டாம்: 'ஷகிலா' பிரஸ்மீட்டில் ஷகிலா

மலையாள திரையுலகின் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'ஷகிலா' . இந்த திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ள நிலையில்

விமானத்தில் இருந்து விழுந்தும் நொறுங்காத மொபைல்… எது தெரியுமா???

2 அடி தூரத்தில் இருந்து விழுந்தாலே போதும் நமது செல்ல மொபைல் போன்கள் பலத்த அடி வாங்கும்.

தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு?

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராக

ஹலோ துபாயா? மார்க் இருக்காரா? யாரை கலாய்க்கிறார் கீர்த்தி சுரேஷ்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையும், 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவருமான கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த'

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பாதிக்காது… விளக்கம் அளிக்கும் தமிழக அரசு!!!

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாண் சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வந்தது.