சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த வாட்ச்மேன்… முதல்வர் செய்த நெகிழ்ச்சி செயல்!

  • IndiaGlitz, [Friday,May 14 2021]

சென்னையில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் வாட்ச்மேன் ஒருவர் தனது ஒரு மாதச் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாகக் கருதி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். இதையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அந்த நபரை நேரில் அழைத்து அவருக்கு நன்றி தெரிவித்ததோடு அவரைப் பாராட்டும் விதமாக ஒரு புத்தகத்தையும் பரிசளித்து உள்ளார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் தங்கதுரை. இவர் சென்னை சாலிகிராமத்தில் தங்கி ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் நிலைமையை சமாளிக்க நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். மேலும் பேரிடர் காலத்தில் வாங்கப்படும் இந்த தொகைக்கான செலவினங்கள் அனைத்தும் பொது வெளியிடப்படும் எனவும் முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த வகையில் தற்போது முதல்வரின் பொது நிவாரண நிதி பிரிவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் பலரும் தங்களது நன்கொடையை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தற்காலிக அடிப்படையில் வாட்ச்மேன் வேலை செய்யும் தங்கதுரை தனது ஒரு மாதச் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கி இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு நிதி வழங்கிய தங்கதுரையை முதல்வர் நேரில் அழைத்து பாராட்டி இருப்பது மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

ஷங்கருக்கு எதிராக லைகா எடுத்த அதிரடி நடவடிக்கை!

'இந்தியன் 2'படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது

தடுப்பூசி போட்டா, மாஸ்க்  தேவையில்லை..! எந்த நாட்டில் தெரியுமா..?

கொரோனா தடுப்பூசியை இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டவர்கள், மாஸ்க் போடத்தேவையில்லை என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

ஒரு நுரையீரலைக் கொண்ட இளம்பெண்… கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட வெற்றிக்கதை!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் ஆக்சிஜன் பற்றாக்குறை, உயிரிழப்பு எனத் தொடர்ந்து எதிர்மறையான செய்திகளையே பார்த்து வருகிறோம்.

கமல்ஹாசனை கலாய்த்த கஸ்தூரி!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு விலகினார் என்பதையும், அதனை அடுத்து கட்சியின் சார்பில் மதுரவாயில்

யுவன்ஷங்கர் ராஜா மற்றும் ஏ.ஆர்.அமீன் பாடிய தனித்துவ பாடல் வைரல்!

இன்று ரம்ஜான் பண்டிகையை அடுத்து அடுத்து தமிழ் திரையுலக இளம் இசைமேதைகளில் ஒருவரான யுவன் சங்கர் ராஜாவும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்களின் மகன் ஏ.ஆர்.அமீன் அவர்களும் இணைந்து