செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடும் நீரின் அளவு அதிகரிப்பு! இப்போது எவ்வளவு தெரியுமா?

வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்கனவே செம்பரபாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி இருந்த நிலையில் தற்போது நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் இன்று காலை கிட்டத்தட்ட முழுகொள்ளளவை நெருங்கி விட்டது.

இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி என்ற நிலையில் இன்று காலை 22 அடியை எட்டி விட்டதால் நண்பகல் 12:00 மணிக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கன மழை தொடர்ந்து பெய்து வரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வருவதால் படிப்படியாக ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கும் என்று ஏற்கனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் நீரின் அளவு தற்போது 3 ஆயிரம் கன அடியாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டபோதே அடையாறு ஆறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் தற்போது வெளியேறும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு வினாடிக்கு 3000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

More News

10 மாவட்டங்களுக்கு நாளையும் பொதுவிடுமுறை: எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயிர் நண்பனை எதிரியாக்கிய விஷால்!

நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து நடித்து வரும் ஒரு திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த்ஷங்கர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பும்

புயலில் விழுந்த மரங்கள்: சாமானியன் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர்

வங்க கடலில் உருவாகிய நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

உலகப் பணக்காரர் வரிசையில் பில்கேட்ஸையே பின்னுத்தள்ளிய எலான் மஸ்க்!!!

SpaceX நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் எலான் மஸ்க் உலக பணக்காரர் வரிசைப் பட்டியலில் உலகின் முன்னணி பணக்காரரான பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2 ஆவது இடத்தைப் பிடித்து

நிவர் புயலுக்கு பெயரை தேர்ந்தெடுத்தது யார்???

பொதுவாக அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு அதை ஒட்டியுள்ள வங்கதேசம்,