ரசிகர்களுக்கு வாட்சன் வெளியிட்ட வீடியோ!

  • IndiaGlitz, [Thursday,May 16 2019]

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணிக்கு கோப்பையை பெற்றுத்தர வேண்டும் என்ற வெறியோடு விளையாடிய வாட்சன், முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்த நிலையிலும் அணிக்காக தீவிரமாக விளையாடினார். இருப்பினும் துரதிஷ்டவசமாக அவருடைய ரன் அவுட் போட்டியை மாற்றிவிட்டது. தோல்வி அடைந்தாலும் வாட்சனின் முயற்சிக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்தது.

இந்த நிலையில் வாட்சன் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'மும்பை அணியுடனான இறுதி போட்டியில் வெற்றிக்கோட்டிற்கு மிக அருகில் வந்தோம். இது ஒரு அருமையான போட்டியாக அமைந்தது. அடுத்த ஐபிஎல் போட்டியில் இதைவிட அதிக வலிமையுடன் வெற்றிக்காக உழைப்போம் என்றும் வாட்சன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வாட்சனின் இந்த வீடியோ தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருவதோடு, மீண்டும் அவரது அதிரடி ஆட்டத்தை காண காத்திருப்பதாக பலர் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

இரண்டையும் கண்டிக்கின்றேன்: கமலின் இந்து தீவிரவாதம் குறித்து பிரபல நடிகை!

கமல்ஹாசன் பேசிய இந்து தீவிரவாதம் குறித்த கருத்து கடந்த இரண்டு நாட்களாக உள்ளூர் ஊடகங்களில் மட்டுமின்றி தேசிய ஊடகங்களிலும் விவாத பொருளாகியுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த முக்கிய பிரபலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தலைவர் 160' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மும்பையில் நடந்து வந்த நிலையில்

உஸ்பெகிஸ்தானில் த்ரிஷாவின் அடுத்த பட படப்பிடிப்பு!

த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2', மற்றும் 'பரமபத விளையாட்டு' ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் அடுத்தடுத்த இந்த படங்கள் வெளியாகவுள்ளது

மீண்டும் புத்துயிர் பெறும் 'இந்தியன் 2': ரிலீஸ் தேதியும் முடிவு செய்யப்பட்டது!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த 'இந்தியன் 2' திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்த நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனம் திடீரென டிராப் செய்துவிட்டதாக கூறப்பட்டது.

'தளபதி 63' பாடல் படப்பிடிப்பு குறித்த தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 63வது படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்