மீண்டும் கணவருடன் சமாதானமான பூனம் பாண்டே: என்னதான் நடக்குது?

  • IndiaGlitz, [Sunday,September 27 2020]

பிரபல நடிகை பூனம் பாண்டே தனது நீண்டநாள் காதலர் சாம் பாம்பே என்பவரை செப்டம்பர் 10ஆம் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணமான ஒரே நாளில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின் அவர் திடீரென திருமணமான 13 நாட்களில் தனது கணவர் சாம் பாம்பே மீது பாலியல் புகார் ஒன்றை கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்

தனது கணவர் சாம் பாம்பே தன்னை பாலியல் ரீதியாக தொல்லை செய்வதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் அவரது கணவர் சாம்பே அதிரடியாக கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது பூனம் பாண்டே தனது கணவருடன் சமாதானம் ஆகிவிட்டதாக அவரே அறிவித்துள்ளார். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் வெறித்தனமாக நேசிப்பதாகவும், தங்களுக்குள் இருந்த பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், எந்த குடும்பத்தில் தான் சண்டை சச்சரவு, ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் உள்ளது’ என்றும் அவர் கூறியுள்ளார்.

கணவர் மீது திருமணமான 13வது நாளே பாலியல் புகார் கொடுத்த பூனம் பாண்டே அதன்பின்னர் நான்கே நாட்களில் மீண்டும் சமாதானம் ஆகியுள்ளதால் அவரது குடும்பத்தில் என்னதான் நடக்குது? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

எஸ்பிபி பாடலை பாடச் சொல்லி விஜய்யை நச்சரித்த வனிதா!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு குறித்து ஒட்டுமொத்த திரையுலக பிரமுகர்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருவதோடு அவரோடு பழகிய நாட்களையும் பகிர்ந்து வருகின்றனர் 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய்சேதுபதியுடன் 7 படங்களில் நடித்த நடிகை!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் நான்காம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க முயற்சிப்பேன்: பிரபல இசையமைப்பாளர்!

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் என பிரபல இசை அமைப்பாளரும், பாரத ரத்னா விருது குழுவில் இருக்கும் உறுப்பினர்களில் ஒருவருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார் 

நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் ஒருவர்: கமல்ஹாசன்

தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்று புகழக்கூடிய பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்த நாளை இன்று திரையுலகம் கொண்டாடி வருகிறது

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எஸ்பிபி போட்ட கண்டிஷன்: தயாரிப்பாளர் தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மறைந்து இரண்டு நாட்கள் ஆன போதிலும் அவரை பற்றிய செய்திகளும், அவருடன் பழகியவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன