close
Choose your channels

ரஜினி, கமல் மட்டும்தான் அரசியலுக்கு வரணுமா? நாங்களும் தயார்: சுஹாசினி

Wednesday, October 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகினர்களின் ஆட்சி தான் நடந்து வருகிறது. அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய அனைவருமே திரையுலகில் சம்பந்தப்பட்டவர்கள்தான். இன்னும் ரஜினி, கமல், விஜய், விஷால் ஆகியோர்கள் உள்பட பல நட்சத்திரங்கள் அரசியலில் இறங்க தயார் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை சுஹாசினி மக்கள் விரும்பினால் அரசியலில் இறங்க தயார் என்று கூறியுள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுஹாசினி இதுகுறித்து கூறியபோது, 'ஜெயலலிதா ஒரு பெரிய பொறுப்பை கொடுத்துவிட்டு அவரது கீழ் குடிமக்களாக இருந்துவிட்டு திரையுலகில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வரவில்லையா? என்று கேட்பதே ஒரு மோசமான கேள்வியாக கருதுகிறேன்.

ஏன் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் மட்டும்தான் அரசியலுக்கு வரவேண்டுமா? ராதிகாவும், ரேவதியும், பூர்ணிமாவும், நதியாவும் கூட அரசியலுக்கு வரலாம். அதெல்லாம் உங்கள் கைகளில்தான் உள்ளது. ஜெயலலிதாவை நம்பி பெரிய பொறுப்பை கொடுத்தது போல் ராதிகாவுக்க்கும், ரேவதிக்கும் சுஹாசினிக்கும் அந்த பொறுப்பை கொடுங்கள், நாங்கள் எல்லாம் அரசியலுக்கு வருவதற்கு தயாராகத்தான் உள்ளோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.