close
Choose your channels

எத்தனை ரஜினி வந்தாலும் எங்களை அசைக்க முடியாது: தமிழக அமைச்சர்

Wednesday, January 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு ரஜினிகாந்த் அல்ல எத்தனை ரஜினிகாந்த் வந்தாலும் எங்களை அசைக்க முடியாது என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சற்றுமுன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

நடிகர் ரஜினியை பார்த்து இன்றைய அரசியல் தலைவர்கள் பயப்படுகின்றனர் என்றும் இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகள் யாருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை என்பதால் ரஜினி சொல்வது மக்களிடம் போய் சேர்ந்து விடுமோ என்று பயப்படுவதாக சற்று முன்னர் பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா கூறியிருந்தார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’எங்களுக்கு ரஜினியை பார்த்து எல்லாம் பயம் கிடையாது. திமுகவுக்கு வேண்டுமானால் அந்த பயம் இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். 

மேலும் ஒரு ரஜினி அல்ல எத்தனை ரஜினி வந்தாலும் எங்களுக்கு எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்றும் எங்களுடைய வரலாறு அப்படி இருக்கிறது என்றும் அடக்குமுறையை எதிர்த்து தோற்றுவிக்கப்பட்டது தான் அதிமுக என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஒரேநாளில் ரஜினியை பார்த்து பயப்படுவதாக ஒரு அரசியல்வாதியும் ரஜினியை பார்த்து எந்த பயமும் இல்லை என்று இன்னொரு அரசியல்வாதி கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos