ஜெயலலிதா போன்ற ஒரு தலைவர் தமிழகத்திற்கு தேவை: பிக்பாஸ் பிரபலம்


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் சர்ச்சைக்குரியவராக மாறி அவர் ஏற்கனவே கஷ்டப்பட்டு சம்பாதித்திருந்த புகழை இழந்து நெகட்டிவ் இமேஜூடன் திரும்புவார் என்பது தெரிந்ததே. பிக்பாஸ் முதல் மற்றும் இரண்டாம் சீசனில் நெகட்டிவ் இமேஜ் பெற்றவர்கள் யார்? என்பதை சொல்லவே தேவையில்லை
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அதிகமானோர்களால் வெறுக்கப்பட்டவர் நடிகை மீரா மிதுனாகத்தான் இருக்கும். குறிப்பாக சேரன் மீது அவர் சுமத்திய வீண்பழி அவருக்கு நீங்கமுடியாத கறையாக உள்ளது
இந்த நிலையில் சமீபத்தில் தமிழகம் மற்றும் தமிழக போலீசார் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை மீரா தெரிவித்துள்ளார். தன்னுடைய புகார்களை தமிழக காவல்துறை கண்டுகொள்ளவில்லை என்றும், தமிழகத்திற்கு ஜெயலலிதா போன்ற ஒரு தலைவர் தேவை என்றும், கல்வி அறிவு பெற்றவர்கள் மட்டுமே தமிழகத்தை ஆள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீராவின் இந்த கருத்து மீண்டும் சர்ச்சையாகியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments