close
Choose your channels

கைலாசாவிலும் கொரோனாவா..! என்ன சொல்கிறார் நித்தியானந்தா..?!

Tuesday, March 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கைலாசாவிலும் கொரோனாவா..! என்ன சொல்கிறார் நித்தியானந்தா..?!

நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என காவல்துறை சொல்கிறது ஆனாலும் அவ்வப்போது வீடியோ டிவீட் என வெளியிட்டு இன்டர்போல் போலீசுக்கே ஆட்டம் காட்டி வருகிறார். போக்ஸோ சட்டத்தில் கைது செய்ய உயர்நீதிமன்றம் பலமுறை சொல்லியும் காவல்துறையினரால் நித்தியனாந்தா எங்கு இருக்கிறார் என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

நித்தியானந்தா கைலாசா என்னும் தீவை வாங்கி அங்கு தன் சீடர்களுடன் வாழ்வதாகவும் அதை தனி நாடாக அறிவிக்க வேலைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸானது கைலாசாவை மட்டும் விட்டு வைத்திருக்கிறதா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.

இந்த கிண்டல்களுக்கு பதில் சொல்லும் விதமாகவும் தன்னை மறந்திருந்த மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாகவும் இரண்டு நாட்களுக்கு முன்னர் நித்தியானந்தாவின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவீட் போடப்பட்டிருந்தது. அதில் "கைலாசாவில் கொரோனா இல்லை. சிவா பெருமான் எங்களை காக்கிறார்" என சொல்லப்பட்டிருந்தது. இது நித்தியானந்தாவின் உண்மையான டிவிட்டர் பக்கம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் இந்த டிவீட்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.