close
Choose your channels

எந்தச் சூழ்நிலையிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்… முதல்வரின் அதிரடி பேச்சு!!!

Saturday, January 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்திய அரசு சட்டங்கள் குறித்து இஸ்லாமிய மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். எந்த சூழ்நிலையிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை அதிமுக அரசு விட்டுக் கொடுக்காது. அவர்களுக்கு துணை நிற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குச் சேகரிப்பின்போது மக்கள் மத்தியில் அதிரடியாக பேசி உள்ளார்.

முன்னதாக அதிமுக அரசு, மத்திய அரசு எடுக்கும் அனைத்து திட்டங்களுக்கும் துணை போவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன. மேலும் திட்டங்கள் குறித்து பேசும்போது அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனால் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் வரும் என்ற நோக்கத்திலும் எதிர்க்கட்சிகள் கருத்துச் சொல்ல தொடங்கி இருந்தன.

இந்நிலையில் கோவை மாவட்டம் குறிச்சி பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, யாரும் யாரையும் மிரட்ட முடியாது. இந்த மண்ணிலே பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு உரிமை உண்டு என நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசினார். இவரது பேச்சு கூட்டத்தில் இருந்த இஸ்லாமிய மக்களை ஈர்க்கும் வகையில் அமைந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.