close
Choose your channels

நாளை முதல் சென்னை மக்களுக்கு புதிய நிபந்தனை: மீறினால் ரூ.500 அபராதம்!

Tuesday, July 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாளை முதல் சென்னை மக்களுக்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிபந்தனையை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் மொத்தம் 2654 பேர்களுக்கும், சென்னையில் மட்டும் 1066 பேர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும், மாஸ்க் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் சென்னை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.