மும்பை மாப்பிள்ளைக்கும் டெல்லி பெண்ணிற்கும் வீடியோ காணொலி மூலம் நடைபெற்ற திருமணம்!!!

  • IndiaGlitz, [Tuesday,April 07 2020]

 

மும்பையைச் சேர்ந்த கடற்படை அதிகாரியான ப்ரீத் சிங் என்பவருக்கும் டெல்லியைச் சேர்ந்த நீத் கவுர் என்பவருக்கும் ஏப்ரல் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமலில் இருப்பதால் திருமணத்தை விமர்சையாக நடத்த முடியவில்லை. மேலும், இவர்களது உறவினர்கள் கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதால் அவர்களால் இந்தத் திருமணத்திற்கு வருகைத் தர முடியாத சூழல் நிலவியது.

இந்நிலையில் தம்பதிகள் இருவரும் வீடியோ மூலம் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இவர்களின் முடிவிற்கு பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் உடன்பட ஏப்ரல் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்காக மும்பையில் மாப்பிள்ளை அலங்காரக் கோலத்துடன் லேப்டாப் முன்னர் அமர்ந்திருந்தார். டெல்லியில் மணப்பெண்ணும் அலங்காரத்துடன் அமர்ந்திருக்க, உலகம் முழுக்க இருந்த உறவினர்களுடன் இவர்களுடன் இணைந்து கொண்டனர். மாப்பிள்ளை தாலி காட்டுவது போன்று பாவனை செய்ய அதை மணப்பெண் ஏற்றுக்கொண்டார். உறவினர்கள் தாங்கள் இருந்த இடங்களிலேயே மலர் தூவி வாழ்த்தவும் செய்தனர். இந்த நிகழ்வுக்குப்பின்னர் உறவினர்கள் உட்பட அனைவரும் நடனம் ஆடி தங்களது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டனர். இத்திருமணம் வீடியோ கான்ப்ரசில் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றிருக்கிறது.

பல லட்சக்கணக்கில் செலவு செய்து விமர்சையாக, ஆடம்பரங்களுக்கு மத்தியல் நடைபெறும் திருமணங்களுக்கு பதிலாக எளிமையாகத் திருமணங்களை நடத்த முடியும் என கொரோனா எடுத்துக் காட்டியிருக்கிறது. கொரோனா வைரஸ் உயிர்க்கொல்லி நோயாக இருந்தாலும் மனிதனுக்கு எது அத்யாவசியத் தேவை என்பதையும் இந்நேரத்தில் பல வழிமுறைகளில் எடுத்துக்காட்டி வருகிறது. வீடியோ மூலம் திருமணம் செய்துகொண்ட ஜோடிகள் கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் முறையாக திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர். 

More News

கொரோனா எதிரொலியால் கடும் வீழ்ச்சியை சந்தித்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு!!!

கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது

சென்னை பீனிக்ஸ் மால் சென்ற 3300 பேர்களுக்கு சோதனை: எத்தனை பேருக்கு கொரோனா?

சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்த 6 பெண்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அந்த 6 பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

சீன அதிபருக்கும் கடிதம் எழுதலாமே: கமல்ஹாசனை கிண்டல் செய்த பிக்பாஸ் போட்டியாளர்

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கமலஹாசனின் இந்த கடிதத்தை கிண்டலடித்துள்ளார்

இரண்டே நாளில் தூய்மை பணியாளர்களுக்கு தோழியாகிய பிரபல விஜே

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தன்னலம் கருதாது பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள்

கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும்: கொரோனா பாதித்தவர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் குறித்த அறிகுறி தெரிந்தவர்கள் தாங்களாகவே அரசு மருத்துவமனைக்கு