close
Choose your channels

சச்சின் மகளை கடத்துவதாக மிரட்டிய வாலிபர் கைது

Monday, January 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகளை கடத்துவதாக அவரது தொலைபேசிக்கு மிரட்டல் விடுத்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சச்சின் தெண்டுல்கரின் 20 வயது மகள் சாராவை தொலைக்காட்சியில் பார்த்து காதலித்த மேற்குவங்கத்தை தேப்குமார் என்பவர் சச்சின் வீட்டின் லேண்ட்லைன் எண்ணை கண்டுபிடித்து சுமார் 20 முறைக்கும் மேல் சாராவிடம் தகாத வகையில் பேசியுள்ளார். தன்னை காதலிக்கவில்லை என்றால் கடத்தி திருமணம் செய்வதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து சச்சின் குடும்பத்தினர் செய்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் விசாரணை செய்ததில் மேற்குவங்கத்தில் இருந்து அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மும்பை மற்றும் கொல்கத்தா போலீசார் இணைந்து நடத்திய விசாரணையில் 32 வயது தேப்குமார் என்பவர் பிடிபட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தான் சாராவை காதலிப்பதாக கூறினார். ஆனால் அவருடைய குடும்பத்தினர் தேப்குமார் மனநிலை சரியில்லாதவர் என்று கூறி வருகின்றனர். இருப்பினும் சச்சின் வீட்டு லேண்ட்லைன் எண் தேப்குமாருக்கு எப்படி கிடைத்தது இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலிசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.