பிரையன் லாரா மும்பை மருத்துவமனையில் அனுமதி! 

மேற்கிந்திய தீவுகளின் முன்னள் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் சச்சின் தெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான பிரையன் லாரா நெஞ்சு வலி காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மும்பை பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் லாரா அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து லாராவின் உடல்நிலை அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை சச்சின் தெண்டுல்கருடன் நேரில் ரசித்த லாரா, அதன்பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது