சபாநாயகர் பதவிக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது..?

கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் உயர்ந்த அதிகாரம் கொண்ட பதவியாகவே சபாநாயகர் பதவி இருந்து வருகிறது. சபாநாயகராக பதவியேற்பவருக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

நடந்து முடிந்த தேர்தலில், தமிழகத்தின் 16 சட்டசபை சபாநாயகராக திமுக-வின் அப்பாவு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகருக்கு உள்ள அதிகாரங்கள்:

1.ஆளும்கட்சி தமிழகத்தை ஆளும் 5 வருடங்களில், சட்டசபை கூட்டங்களுக்கு தலைமை வகிப்பவர் தான் சபாநாயகர் தான்.

2.அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் கருத்துக்களை அவை குறிப்பில் கூறும் போது, அவற்றை பதிவிட மற்றும் நீக்க இவருக்கு அதிகாரம் உண்டு.

3.சட்டசபையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஒவ்வொரு துறை சார்ந்தும், முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பும்போது, அவர்களை பதில் கூற சபாநாயகர் அழைப்பார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் முறைகேடாகவோ, சர்ச்சைக்குரிய வகையிலோ நடந்து கொண்டால், அவர்களை கூட்டத்திலிருந்து முழுவதுமாக நீக்கவோ, தற்காலிகமாக நீக்கவோ சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது.

4. ஆளும்கட்சி சார்ந்தவராக சபாநாயகர் இருந்தாலும், பதவிக்காலம் முடியும்வரை அவர் கட்சி குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இவர் கட்சி சார்பற்றவராகவே கட்டாயம் நடந்து கொள்ள வேண்டும்.

5. சட்டசபை வளாகம் முழுவதும், அவைத்தலைவரான சபாநாயகரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும். எம்எல்ஏ-க்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டாலோ, தனி குழுவாக பிரிந்து வாதம் செய்தாலோ அவர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் இவருக்கு உள்ளது.

6. சட்டசபை உறுப்பினர்கள், சட்டமன்றத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் நடந்துகொண்டால், அவர்களுக்கு இதுகுறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. அவர் பதிலளிக்கவில்லை எனில், சரியான நடவடிக்கையை இவர் எடுக்கலாம்.

7. சபாநாயகரின் எடுக்கும் முடிவுகள் மற்றும் உரிமைகளில் நீதிமன்றம் தலையிடாது.


8. எதிர்பாராத விதமாக எம்எல்ஏ-க்கள் பதவியிலிருந்து விலகினாலோ, தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ, திடீர் மரணம் அடைந்தாலோ, சபாநாயகர் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

9. சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என 80-களில் பிரகனப்படுத்தியவர், அப்போது சபாநாயகராக இருந்த பி எச் பாண்டியன் ஆவார்.

10. சட்டமன்றத்தில் மசோதாவிற்காக வாக்கெடுப்பு நடந்தால், ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் வாக்கு எண்ணிக்கை சமமாக இருந்தால், சபாநாயகர் வாக்களிக்க உரிமை உண்டு. ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என உத்தரவிட்டால், அதை நடத்தி முடிவுகளை அறிவிக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு.
 

More News

தென்கிழக்கு அரபிக்கடலில் புயல்… தமிழகத்திற்கும் பாதிப்பா?

வரும் மே 16 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது

கொரோனா பாதித்ததால் வீட்டை பூட்டிய முதலாளி… இளம்பெண் குழந்தையோடு டாக்ஸியில் தங்கிய அவலம்!

இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

தவறு செய்தவர்கள் திருந்துவார்கள் என்று காத்திருக்க மாட்டேன்: கமல்ஹாசன் அறிக்கை

தவறிழைத்தவர்கள் தாமே திருந்துவார்கள் என்று காத்திருக்க மாட்டேன் என்றும் தவறிழைத்தவர்களை திருத்தம் கடமையும் உரிமையும் உள்ள தலைவன் நான் என்றும் கமலஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளிக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி

சில மாதங்களாகவே தமிழ் திரை உலகிற்கு போதாத காலம் ஏற்பட்டுள்ளது என்பது நடைபெற்றுவரும் அசம்பாவித சம்பவங்களில் இருந்து தெரிய வருகிறது. மாரடைப்பு காரணமாகவும், கொரோனா வைரஸ் தொற்று

விஜே சித்ராவின் கடந்த ஆண்டு அன்னையர் தின வீடியோ வைரல்: என்ன செய்திருக்கிறார் பாருங்கள்!

பொதுவாக அன்னையர் தினத்தில் தாயுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து ஒரு வாழ்த்து தெரிவிப்பது மட்டுமே திரையுலக பிரபலங்களின் வழக்கமாக இருந்து வருகிறது.