close
Choose your channels

ஒரு ரன்னில் தோல்வி: குட்டிப்பாப்பாவின் வேண்டுகோளை ஏற்றாரா தோனி?

Monday, April 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வாய்ப்பு மிகவும் குறைவு என்ற நிலையில் விஸ்வரூபம் எடுத்தார் தல தோனி. கடைசி ஒரு ஓவரில் 26 ரன்கள் என்ற நிலையில் 4,6,6,2,6 என ஐந்து பந்துகளில் 24 ரன்கள் அடித்த தோனி, கடைசி பந்தில் இரண்டு ரன் எடுக்க தவறியதால் நூலிழையில் சிஎஸ்கே அணி வெற்றியை தவறவிட்டது.

இந்த நிலையில் சிஎஸ்கே 8 பந்துகளில் 27 ரன்கள் தேவை என்று இருந்த நிலையில், மைதானத்தில் இருந்த ஆர்சிபி ரசிகையான குட்டிப்பாப்பா ஒருவர் ஒரு பதாகையில் 'ஹேய் தோனி, எங்கள் விராத் வெற்றி பெற வேண்டும்! ப்ளீஸ்' என்று எழுதியிருந்தார். இந்த பதாகை நேரடி ஒளிபரப்பில் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டு வைரலானது. குட்டிப்பாப்பாவின் ஆசை நிறைவேறவேண்டும் என்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

குட்டிப்பாப்பாவின் ஆசையை நிறைவேற்றவே 5 பந்துகளில் 24 ரன்கள் அடித்த தோனி, ஒரு பந்தில் இரண்டு ரன்களை அடிக்க தவறியுள்ளார். 'இந்த குட்டி பாப்பாவுக்காக தோனி எத்தன தடவ வேணும்னாலும் தோக்கலாம், அதேவேளையில் கோலி இனிவரும் அனைத்து போட்டியிலும் வெற்றிபெற வாழ்த்துகள்' என ரசிகர் ஒருவர் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.