close
Choose your channels

19வது ஓவரின்போது தல அப்படி என்ன தான் சொன்னார்?  சஹாரின் சகோதரி பதில்!

Monday, April 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சனிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுகு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற 2 ஓவர்களில் 39 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. களத்தில் சர்ஃபாஸ்கான் மற்றும் மில்லர் ஆடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் 19வது ஓவரை தீபக் சஹார் பந்துவீசவந்தார். வழக்கமாக முதல் பத்து ஓவருக்குள் நான்கு ஓவரையும் முடித்துவிடும் சஹார், இந்த முறை பிராவோ காயம் காரணமாக 19வது ஓவரை வீச வந்ததால் கொஞ்சம் டென்ஷனுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் முதல் இரண்டு பந்துகளை தீபக் சஹார் நோபாலாக வீசியதும், அந்த இரண்டு பந்துகளுக்கு ஃப்ரி ஹிட் கொடுக்கப்பட்டதாலும் டென்ஷன் எகிறியது. இதனையடுத்து தீபக் சஹார் அருகே வந்த கூல் கேப்டன் தல தோனி, தீபக் சஹாருக்கு சில அறிவுரைகளை கூறினார். அதன்பின் அருமையாக பந்துவீசிய தீபக் சஹார், கடைசி பந்தில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த ஓவரால்தான் சிஎஸ்கே அணி வென்றது.

இந்த நிலையில் அந்த டென்ஷனான நேரத்தில் தீபக் சஹாரிடம் தல அப்படி என்னதான் சொல்லியிருப்பார் என்பதே பலரது கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே விளையாடும் அனைத்து போட்டிகளையும் தவறாமல் நேரில் பார்க்கும் தீபக் சஹாரின் சகோதரி மால்தி சஹாரிடம் இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு மால்தி சஹார், 'அதை என்கிட்ட கூட சொல்ல மாட்டேங்குறார். அது என்னன்னு தெரிஞ்சுக்காம என் தலையே வெடிச்சிரும்போல் இருக்குது' என்று பதிலளித்துள்ளார். அப்படி என்னதான் தல கூறியிருப்பார். உங்கள் கற்பனையை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.