நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின்விளக்குகளை அணைத்தால் என்ன நடக்கும்???

  • IndiaGlitz, [Saturday,April 04 2020]

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைவரும் தங்களது வீடுகளில் இருக்கும் மின்விளக்கை அணைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா அரக்கனை தடுக்கும் விதமாகவும் ஒற்றுமையை பலப்படுத்தும் விதமாகவும் இதை பின்பற்றுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுதியுள்ளார். இப்படி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அணைக்கும்போது, மின் பகிர்மானங்கள் பாதிக்கப்படும். பல மின் தொகுப்புகள் பழுதாகும் நிலைமையும் வரலாம். அதை சரிசெய்யவே சில வாரங்கள் ஆகலாம் எனவும் தற்போது அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மின் விளக்குகள் மட்டும் தான் வீடுகளில் அணைக்கப்படும். மற்றபடி டிவி, பிரிட்ஜ் போன்ற பொருட்கள் அப்படியே இருக்கும் என்பதால் பெரிய மாற்றங்கள் ஏற்படாது எனச் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலர் அதிகாரிகள் மின் தொகுப்பில் உள்ள அதிவெண்கண் மாறும்போது நிலைமை சிக்கலுக்குள்ளாகும் எனவும் எச்சரிக்கின்றனர். இதுவரை இந்தியாவில் 49.0 Hertz முதல் 50.05 Hertz வரை மின்சாரம் மின்தொகுப்புகளின் வழியாக நாடு முழுவதும் பகிரப்பட்டு வருகிறது. இந்த அதிர்வெண்கள் தற்போது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

மின்தேவை குறையும்போது அதன் உற்பத்தியை குறைந்த நேரத்திற்கு குறைத்தால் நிலைமை சரிசெய்யப்படும் எனப் பொதுவாகக் கூறப்பட்டாலும் இப்படி செய்வது சாத்தியமா என்பதே தற்போது உள்ள கேள்வி. தற்போது இந்தியாவிலுள்ள மின்தொகுப்புகள் 140 கிகா வாட் மின்சாரத்தை கடத்தும் திறனுடன் இயங்கிவருகின்றன. இதில் 10 விழுக்காடு குறைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்கப்படும் என தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தின் முன்னாள் இயக்குநர் எஸ்.அக்ஷய் காந்தி தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த கட்டுப்படுத்தலுக்கு மின் ஊழியர்கள் முன்பே தயார் நிலையில் இருக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

More News

கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து, இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய மருத்துவர்கள்!!!

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அவலம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே வருகிறது.

கொரோனாவை விரட்ட சின்னச்சின்ன விஷயங்களை செய்தால் போதும்: தமன்னா

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை

நயன்தாரா செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த ஆர்கே செல்வமணி

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சினிமா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் எதிரொலி: ஓரின திருமணத்தை ஒத்திவைத்த கிரிக்கெட் வீராங்கனை

https://www.dinamani.com/sports/sports-news/2020/apr/04/south-africa-woman-cricketer-lizelle-lees-marriage-on-hold-owing-to-coronavirus-pandemic-3394277.html

யோகிபாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தள்ளிவைப்பு: புதிய தேதி என்ன?

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு சமீபத்தில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்தார் என்பதும், அவரது குலதெய்வம் கோவிலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் அவரது உறவினர்கள் மற்றும் நெருக்கமான