ரஜினியின் ஏமாற்றத்திற்கு இதுதான் காரணமா? பரபரப்பு தகவல்


Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார் என்பது தெரிந்ததே. இந்த சந்திப்புக்கு பின் பேட்டியளித்த ரஜினிகாந்த், தான் ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றம் அடைந்ததாக கூறினார்.
ரஜினி என்ன பேசினாலும் அதனை விமர்சனம் செய்யும் ஒரு சில ஊடகங்கள் இந்த ’ஏமாற்றம்’ குறித்து பல்வேறு கற்பனைகளை பதிவு செய்து வந்தன. இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் சிலர் கூறிய தகவல்கள் கசிந்து உள்ளதாகவும் அதில் ரஜினியின் ஏமாற்றத்திற்கு காரணம் இதுதான் என்றும் ஒரு தகவல் ஊடகங்களில் பரபரப்பாக பதிவு செய்யபட்டு வருகிறது.
தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை ரஜினி-மக்கள்-மன்றத்திற்காக சேர்க்க வேண்டும் என்று ரஜினிகாந்த் டார்கெட் கொடுத்துள்ளதாகவும் ஆனால் மாவட்ட செயலாளர்கள் அதனை நிறைவு செய்யவில்லை என்றும் அதனால் தான் ரஜினி ஏமாற்றம் அடைந்ததாக கூறியதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது ரஜினியே இது குறித்து தெரிவித்தால் மட்டுமே தெரிய வரும்
50 ஆண்டுகளுக்கு மேல் கட்சி நடத்தி வரும் அதிமுக, திமுக கட்சியில் கூட ஒன்றரை கோடி தொண்டர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், கட்சியே ஆரம்பிக்க ரஜினி மக்கள் மன்றத்திற்கு ஒரு கோடி தொண்டர்கள் எப்படி இணைக்க முடியும் என்பது அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments