close
Choose your channels

இந்தியாவில் சல்யூட் பல ரகம்… வித்தியாசம் தெரியுமா?

Friday, January 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளிலும் சல்யூட் வைக்கும் முறை கடைப்பிடிக்கப் படுகிறது. இது மற்றவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அவர்களின் நம்பகத் தன்மையை சந்தேகப்படாமல் இருப்பதன் அடையாளமாகவும் வைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் போலீஸ் துறை முதற்கொண்டு இராணுவம், விமானப்படை, கப்பற்படை என அனைத்துத் துறைகளிலும் இந்த சல்யூட் வைக்கும் நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர்.

ஆனால் இந்தியாவில் போலீஸ் வைக்கும் சல்யூட்டிற்கும் மற்ற துறையைச் சார்ந்தவர்கள் வைக்கும் சல்யூட்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன. அதில் முப்படைகளில் ஒன்றான தரைப்படை (இராணுவம்) – வலது உள்ளங்கை முற்றிலும் வெளிப்புறம் தெரிவது மாதிரி விரித்து சல்யூட் வைக்கின்றனர். காரணம் ஒரு இராணுவ வீரர் மற்றொரு இராணுவ வீரரைப் பார்க்கும் போது தனது கையில் எந்த ஆயுதமும் இல்லை என தெரிவிக்கவாம். அதேபோல சல்யூட் வைக்கும்போது அவர்களின் நடுவிரல் நெற்றியை தொட்டுக் கொண்டோ அல்லது தொப்பியைத் தொட்டுக் கொண்டே இருக்குமாறு சல்யூட் வைக்கின்றனர். இது எதற்காக என்றால் தான் சந்திக்கிற அதிகாரி அல்லது இராணுவ வீரர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என வெளிப்படையாகக் கூறுவதற்கு இப்படி செய்கின்றனர்.

கப்பற்படை- பழங்காலத்தில் கப்பல் மாலுமிகள் பெரும்பாலும் கப்பலில்தான் பணியாற்றி உள்ளனர். அப்படி கப்பலில் பணியாற்றும்போது அவர்களின் கைகளில் கரை, அழுக்கு போன்றவை ஏற்படாமல் தடுப்பது மிகக் கடினம். இதனால் வேலைச் செய்து கொண்டு இருக்கும்போது உயர் அதிகாரி வந்தால் அவருக்கு தன்னுடைய கையில் இருக்கும் அழுக்கை மறைத்து சல்யூட் வைக்க வேண்டும் என நினைத்து உள்ளனர். அதாவது மரியாதை நிமித்தமாக கை அழுக்கை மறைத்து சல்யூட் வைப்பதுதான் கப்பற்படை சல்யூட். இவர்கள் ஜீரோ டிகிரியில் கையை தலைக்குப் பின்புறமாக சாய்த்து, தரையைப் பார்த்த மாதிரி சல்யூட் வைக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விமானப்படை – கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தரைப்படை வீரர்களும் இராணுவப்படை வீரர்களை போலவே சல்யூட் வைத்து இருக்கின்றனர். அதாவது உள்ளங்கை முழுவதும் வெளியே தெரிவது மாதிரி விரித்து சல்யூட் வைத்து உள்ளனர். பின்பு இந்த சல்யூட் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. தற்போது விமானப்படை வீரர்கள் 48 டிகிரியில் வானத்தை நோக்கி கையை விரித்து சல்யூட் வைக்கின்றனர். காரணம் விமானப்படையின் விமானம் எப்போதும் பறக்கத் தயாராக இருக்கிறது என்பதை சொல்லும் நோக்கில் இப்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதைத்தவிர இறந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவது, உயிரிழந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்துவது, குடியரசு தினம், சுதந்திரத்தினம், இராணுவ தினம், கப்பற்படை தினம், விமானப்படை தினம் என விழாக்கள் மற்றும் நடைமுறைகளுக்கும் பல வித்தியாசமான நடைமுறை பின்பற்றப் படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.