ராஜமவுலி படங்கள் பிரம்மாண்டமாக இருப்பது எதனால்?

  • IndiaGlitz, [Thursday,July 09 2015]

தமிழில் பிரம்மாண்டத்துக்குப் பெயர்போனவர் யார் என்று சொன்னால் சின்னக் குழந்தையும் சொல்லிவிடும் இயக்குனர் சங்கரின் பெயரை. அதே போல் தெலுங்கில் பிரம்மாண்டத்துக்கு பிரபலமானவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவரது திரைப்படங்கள் தமிழிலும் வெற்றிபெற்றுள்ளதால் தமிழகத்திலும் பிரபலம்.

தற்போது ராஜமவுலி தன் மூன்றாண்டு கடுமையான உழைப்பைக் கொடுத்து தமிழ்-தெலுங்கு இரு மொழிகளிலும் இயக்கியிருக்கும் பாகுபலி படம் ஜூலை 10 அன்று உலகெங்கும் உள்ள 4000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராஜமவுலியின் அனைத்துப் படங்களிலும் பிரம்மாண்டம் மிளிரும். பாகுபலி போன்ற ராஜா காலத்துக் கதை என்றால் கேட்கவே வேண்டாம். அதற்கேற்றார்போல் 'இந்தியாவின் மிகப் பெரிய அசையும் படம்' என்ற விளம்பரத்துடன் வெளியாகிறது பாகுபலி.

வியக்கவைக்கும் பிரம்மாண்டத்துடன் படங்களை இயக்குவதற்கான விதையை எங்கிருந்து பெற்றார் என்பதை விளக்கியிருக்கீறார் ராஜமவுலி.

சிறுவராக இருந்தபோது ராஜமவுலியின் தந்தை அவருக்கு ராஜா-ராணி கதைப் புத்தகங்களை வாங்கித் தருவார். ஒரே மூச்சில் படித்து முடித்துவிடும் அளவுக்கு அவற்றின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் ராஜமவுலி. அந்தக் கதைகளில் வரும் ராஜா, ராணி, இளவரசர்கள், எதிரிகள் உள்ளிட்ட பாத்திரங்களின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருக்கிறார். சூப்பர்மேன் பேட்மேன், அயர்ன்மேன். உள்ளிட்ட காமிக்ஸ் வகைக் கதைகளும் ராஜமவுலியை பெரிய அளவில் ஈர்த்திருக்கின்றன. அவற்றில் உள்ள ஓவியங்கள் அவரது மூளையில் திரைப்படங்கள் போல விரியுமாம்.

இதுபோன்ற குழந்தைப் பருவ அனுபவங்களையே தனது படங்களின் பிரம்மாண்டத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார் ராஜமவுலி.

More News

ஹாட்ரிக் வெற்றிக்கு வித்திடுவார்களா விஜய்-முருகதாஸ்?

இளையதளபதி விஜய் நடித்த 58வது படமான 'புலி' விரைவில் ரிலீஸாகவுள்ளது. அதேவேளையில் அவர் நடித்து வரும் 59வது படத்தின் படப்பிடிப்பு கடந்த ...

'பாகுபலி' படத்தில் ரம்யா கிருஷ்ணனின் முதல் முயற்சி

ரம்யா கிருஷ்ணன் குரல் ஒலிக்கப் போகும் முதல் தெலுங்கு படம் ’பாகுபலி’

'விஜய் 59' படத்தில் இணைந்த 3-வது நாயகி

'புலி' படத்திற்கு பின்னர் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படம் குறித்து தினந்தோறும் ஒவ்வொரு தகவல்களாக பரபரப்புடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது...

ஊட்டியில் ஜெயம் ரவி-லட்சுமி மேனன் படப்பிடிப்பு

ஜெயம் ரவி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான 'ரோமியோ ஜூலியட்' சமீபத்தில் 25வது நாளை பூர்த்தி செய்தது. 'பேராண்மை' படத்திற்கு பின்னர் ...

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி. ஒரு முன்னோட்டம்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மன்னர் காலத்து கதை என்பது ஒரு புதுமையான விஷயம் இல்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்தே சரித்திரக் கதை திரைப்படங்களை பார்த்து...