பீகாரில் எந்த காரணத்திற்காகவும் என்.ஆர்.சி நுழையமுடியாது..! நிதிஷ் குமார்.

 

என்ஆர்சி ஏன் எதற்காக என கேள்வி எழுப்பியுள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அதனை அமல்படுத்த மாட்டோம் என கூறியுள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதுகுறித்து கூறிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்
‘‘சிறுபான்மை மக்களின் உரிமையை காப்பதில் எந்த சமரசமும் இல்லை. அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் எப்போதுமே முன்னுரிமை வழங்குவோம். என்ஆர்சி எதற்காக, பிஹாரில் எந்த காரணத்தை முன்னிட்டும் அமல்படுத்த மாட்டோம்.’’ எனக் கூறினார்.

More News

ஆட்டோ டிரைவரை பயமுறுத்தி பிராங்க் ஷோ: 6 இளைஞர்கள் கைது

பிராங்க் ஷோ என பொது மக்களை பயமுறுத்தும் வீடியோக்கள் தற்போது யூடியூபில் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வீடியோக்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைப்பதால்

உதயநிதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அரசியல் பணிகளில் பிசியாக இருந்தபோதிலும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ', கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் 'ஏஞ்சல்' மற்றும் மகிழ்திருமேனி இயக்கும் ஒரு படம்

கியர் போட்ட கல்லூரி மாணவிகள்: சஸ்பெண்ட் ஆன பேருந்து டிரைவர்!

கேரளாவில் அரசு பேருந்து ஒன்று கொண்டிருந்த அந்த பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் ஒருவர் கல்லூரி மாணவிகளுக்கு கியர் போட கற்றுக் கொடுத்ததை

கூகுள், ஆண்ட்ராய்டுலாம் வேணாம்.. நாங்களே ஒரு OS செய்யப் போறோம்..! Facebook அதிரடி.

சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் தனக்கென ப்ரேத்யேக இயங்குதளம் ஒன்றை உருவாக்கி வருகிறது. எதிர்காலத்திலும் கூகுளின் ஆண்ட்ராய்டை மட்டும் சார்ந்திருக்காமல் இருக்க இந்த புதிய இயங்குதளத்தை உருவாக்கி வருகிறது.

`மனிதனாக இருப்பதுதான் அவர் செய்த குற்றம்!’- ஜாமியா மாணவருக்காகக் கலங்கிய ஹர்பஜன் சிங்.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடந்திவருகின்றனர்