மோகன்லாலுக்கும் நடிகை ரேகாவுக்கு என்ன உறவு? பொழுது போகாமல் இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி 

24 மணி நேரமும் பிசியாக இருந்த பலர் தற்போது அதே 24 மணி நேரமும் வீட்டில் சும்மா இருக்கின்றனர். வடிவேலு ஒரு படத்தில் கூறியது போல் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இப்போது மக்கள் உணர்ந்திருப்பார்கள்.

இந்த நிலையில் பொழுது போகாமல் இருக்கும் மக்களுக்கு ஒரு கேள்வியை டுவிட்டர் பயனாளி ஒருவர் கேட்டிருக்கின்றார். அதாவது மலையாள நடிகர் மோகன்லாலுக்கும் ஜெமினி கணேசன் மகளும் இந்தி நடிகையுமான ரேகாவுக்கும் என்ன உறவு என்று? மோகன்லாலுக்கும் ரேகாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கின்றார் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு அவருடைய முழு கேள்வியையும் படிக்க வேண்டும். அந்த முழு கேள்வி இதுதான்.

மலையாள நடிகர் மோகன்லால். அவரோட மாமனார் நடிகர் பாலாஜி. பாலாஜியோட சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி. இவர் ஒய்ஜி .மகேந்திரனோட அம்மா. ஒய்ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி. இவர் கணவர் அருண். அருணின் அம்மா விஜய சாமுண்டீஸ்வரி. விஜய சாமுண்டீஸ்வரியோட அம்மா நடிகை சாவித்திரி, அப்பா நடிகர் ஜெமினி கணேசன். நடிகர் ஜெமினி கணேசன் மகள் இந்தி நடிகை ரேகா. இப்ப சொல்லுங்க மோகன்லாலுக்கும் ரேகாவுக்கும் என்ன உறவு என்று கேள்வி எழுப்பியுள்ளார். பொழுது போகாமல் இருப்பவர்கள் முயற்சித்து விடையை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யவும்.

More News

கொரோனா தடுப்பு நிதியாக ரூ.1150 அளித்த 4ஆம் வகுப்பு மாணவன்: நன்றி கூறிய முதல்வர்

கொரோனா தடுப்பு நிதியாக மத்திய மாநில அரசுகளுக்கு தொழிலதிபர்களும் திரையுலக பிரபலங்களும் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதியுதவி செய்து வரும்

பிறந்த குழந்தைக்கும் முகக்கவசங்கள்!!!

கொரோனா பரவலைத் தடுக்க ஒவ்வொருவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயம் என உலகம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது

அல்லு அர்ஜூன் படத்திற்காக போட்டி போடும் சிம்பு - சிவகார்த்திகேயன்? 

கடந்த சில ஆண்டுகளாக தமிழில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள் பிற மொழிகளிலும், பிற மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படங்கள் தமிழ் மொழியிலும் ரீமேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது 

இணையத் திரைகளில் வரிசைக்கட்டும் புதுப்படங்கள்!!!

கொரோனா ஊரடங்கில் சினிமாத்துறை கடும் பாதிப்பை சந்தித்திருக்கிறது.

ஊரடங்கால் மனைவியை பிரிந்த கணவர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில் ஒருசில உயிர்களும் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது