பிரதமர்-தமிழக முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார். இந்தப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சில முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் சந்திப்பின்போது என்ன நடந்தது என்பது குறித்த விளக்கத்தை செய்தியாளர்களிடம் அளித்து உள்ளார்.

அதில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திறந்து வைப்பதற்கும் புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும் பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்து உள்ளார். மேலும் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்றும் தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடந்தது என்றும் விளக்கம் அளித்து உள்ளார். மேலும் தொடர் மழையால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் நிவாரண நிதி குறித்துப் பேசப்பட்டதாகவும் தகவல் தெரிவித்து உள்ளார்.

அதோடு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 40 பேர் விடுதலை செய்யப்பட்டு இருப்பதாகவும் மற்றவர்கள் அடுத்த சில நாட்களில் விடுதலை செய்யபடுவார்கள் என எதிர்ப்பார்க்கப் படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.

More News

அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை- தமிழக முதல்வர் திட்டவட்டம்!

அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

சிவகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை!  

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்

சோனு சூட் ஆரம்பித்து வைத்த அடுத்த பொதுசேவை: இரண்டு மாநில மக்கள் மகிழ்ச்சி!

திரையில் வில்லனாக நடித்தாலும் கொரோனா லாக்டவுன் நேரத்தில் லட்சக்கணக்கான மக்களின் மனதில் ஹீரோவாக மாறியவர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் என்பது தெரிந்ததே 

தல தோனி சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் வீரர்… ஆஸ்திரேலியா களத்தில் அதிரடி!

பிரிஸ்பனில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது

பிக்பாஸ் டைட்டிலுக்கு பின் ஆரி ஒப்பந்தமான முதல் படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாயகன் ஆரி அந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றதற்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே