இனி இந்த போன்களிலெல்லாம் வாட்ஸ் அப் வேலை செய்யாது..!

  • IndiaGlitz, [Friday,December 13 2019]

புது அப்டேட்டுகளுடன் பழைய இயங்குதளங்களை இணைத்து சேவைகளை வழங்க முடிவதில்லை என்பதால் சில போன்களில் இனி தங்களது சேவையை பெற முடியாது என் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் அறிவித்துள்ள அறிவிப்பின்படி, பல ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயல்படாமல் இருக்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளது. பல ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் புதிய அப்டேட்கள் செயல்படாது என்பதனால் 2020 ஆண்டு முதல், ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது.

சமீபத்திய அறிவிப்பின்படி அண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் iOS 8 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள வெர்ஷன் கொண்ட ஐபோன்களில் அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ்அப் சேவை இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்த அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளத்தில் இயங்கும் போன்களில், வாட்ஸ்அப் சேவை பயன்படுத்தி வரும் பயனர்களின் பழைய அக்கௌன்ட் 2020ம் ஆண்டு முதல் செயல்படாது. அதேபோல் இனி இவர்களால் புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கவோ அல்லது பழைய அக்கௌன்ட்டை பயன்படுத்தவோ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.டிசம்பர் 31ம் தேதி முதல் அனைத்து விண்டோஸ் ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ்அப் சேவை செயல்படாது. அதேபோல் விண்டோஸ் நிறுவனம் விண்டோஸ் 10 மொபைல் OS சேவையை முற்றிலுமாக நீக்கம் செய்கிறது.

அதேநேரம் KaiOS 2.5.1பிளஸ், ஜியோபோன் மற்றும் ஜியோ போன் 2 ஆகிய போன்களில் மட்டும் வாட்ஸ்அப் சேவை தடையின்றி செயல்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

More News

வெளிநாட்டில் கணவர்.. மற்றொரு காதல். கேரளாவில் பெண் கொலை.

கேரள மாநிலம், கொல்லம் அஞ்சுமூக்குப் பகுதியைச் சேர்ந்தவர் உமர் ஷெரீப். இவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி ஷைலா. இந்தத் தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அறிவு இல்லையா..! ரசிகர் மீது கோபப்பட்ட ரொனால்டோ. வீடியோ.

கிறிஸ்டியானோ ரொனால்டோவை பிடித்து செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் அவரது கோபத்திற்கு ஆளானர்.

திருமணத்திற்கு முந்தைய நாள் எய்ட்ஸ் இருப்பதாக கூறிய மணமகன்: அதிர்ச்சி தகவல்

பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெண் பார்த்து திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென பெண் வீட்டாரிடம் திருமணத்துக்கு முந்திய நாள் தனக்கு

போலீஸ் துப்பாக்கிச் சூடு, 2 பேர் பாலி.. 11 பேர் படுகாயம் CAB

அசாமில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

கேரளாவில் மலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண்..! வீடியோ.

20 கிலோ மலைப்பாம்பை ஒரு பெண் உயிருடன் பிடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.