close
Choose your channels

எடப்பாடி அரசு கவிழ்ந்த அடுத்த நாள் ரஜினியின் கட்சி: தமிழருவி மணியன்

Sunday, October 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் கட்சி தொடங்குவார் என்றும் அவர் கட்சி ஆரம்பிப்பதற்கான 90 சதவீத பணிகளை முடித்து விட்டார் என்றும் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே கூறப்பட்டது.

இந்த நிலையில் ’தர்பார்’ படத்தை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் கண்டிப்பாக அவர் கட்சி ஆரம்பிப்பார் என்றும் ஏப்ரலில் அவரது கட்சி தொடங்கப்பட வாய்ப்பு உள்ளதுஎன்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினியின் நெருங்கிய நண்பரும் அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியன் அவர்கள் ’எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கவிழ்ந்து அடுத்த நாளே ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என்றும், தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தான் ரஜினிகாந்த் தனது கட்சியை தொடங்குவார் என்றும் தெரிவித்தார்.

மேலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் அரசியலுக்கு வந்த பின்னரும், கட்சி ஆரம்பித்த பின்னரும், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் நடித்துக் கொண்டிருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவர் நடித்து கொண்டிருந்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தில் நடித்து முடித்தபின்னர் தான் முதலமைச்சர் பதவியை எம்ஜிஆர் ஏற்றார்.

அதுபோலவே ரஜினிகாந்தும் தற்போது அரசியலுக்கு வரும் முன் முடிந்தவரை திரைப்படங்களை நடிப்பார் என்றும், தற்போது அவர் நடித்துள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கலுக்கும், இனி அவர் நடிக்கவுள்ள திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வரும் என்றும் தீபாவளி கழித்து கண்டிப்பாக ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.