close
Choose your channels

சென்னையில் எந்த பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகம்? 

Thursday, April 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 738 பேராக இருக்கும் நிலையில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 48 பேர்களில் 7 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 156 பேர்களில் 43 பேர் ராயபுரம் மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இங்குதான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் திருவிக. நகர் மண்டலத்தில் 22 பேர்களும் அண்ணாநகர் மண்டலத்தில் 19 பேர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 18 பேர்களும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 13 பேர்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 11 பேர்களும், பெருங்குடி மண்டலத்தில் 5 பேர்களும், திருவொற்றியூர், வளசரவாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் தலா 4 பேர்களும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மேலும் மாதவரம் பகுதியில் 3 பேர்களும், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் தலா 2 பேர்களும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் மணலி, அம்பத்தூரில் இதுவரை பாதிப்பு ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos