close
Choose your channels

கொரோனா பூஸ்டர் டோஸ் போடுவதை நிறுத்துங்கள்… கோரிக்கை வைக்கும் WHO… ஏன்?

Thursday, August 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பூஸ்டர் டோஸ் போடுவதை உலக நாடுகள் குறைந்தது செப்டம்பர் மாதம் இறுதிவரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாம் அலைத்தாக்கம் ஏறக்குறைய முடிவிற்கு வந்துவிட்டது. இந்நிலையில் மூன்றாம் அலை தாக்கம் சில நாடுகளில் துவங்கி இருக்கிறது. இந்த மூன்றாம் அலைத் தாக்கத்திற்கு டெல்டா வைரஸின் திரிபே காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிகளவு பரவும் தன்மை கொண்ட டெல்டா வைரஸ் பரவலைத் தடுக்க சில பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் மருந்துகளும் செலுத்தப்பட்ட பின்பு மேலும் 3 ஆவதாக பூஸ்டர் டோஸ் செலுத்துவதை வாடிக்கையாக்கி வருகின்றன.

இப்படி பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய்ப் பாதிப்பில் இருந்து முற்றிலும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது. ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று WHO தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில் 3 ஆவது டோஸ் செலுத்துவதால் பல ஏழை நாடுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு அனுப்பப்படும் தடுப்பூசியின் அளவு மிகவும் குறைந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் தடுப்பூசி செலுத்துவதில் பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு பூஸ்டர் டோஸ் போடுவதை குறைந்தது செப்டம்பர் மாதம் இறுதிவரை நிறுத்தி வைக்குமாறு உலகச்சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.