பிக்பாஸ் சீசன் 6: இந்த வாரம் வெளியேறும் நபர் இவர்தான்!

கடந்த மூன்று வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியம் அதிகரித்து வருவதால் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் முதல் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியேற்றப்படாத நிலையில் 2-வது வாரம் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்து தானாக வெளியேறினார் என்பதும், குறைந்த வாக்குகள் அடிப்படையில் சாந்தி வெளியேறினார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ஜனனி, ரக்சிதா, அசல் கோளார், மகேஸ்வரி, ஏடிகே, அசீம், ஆயிஷா ஆகிய 7 பேர்கள் உள்ள நிலையில் அவர்களில் மிக குறைந்த வாக்குகள் எண்ணிக்கையில் அசல் கோலார் இந்த வாரம் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் இதுவரை வெறும் 6.59 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

நாமினேசன் செய்யப்பட்டவர்களில் ஜனனி 31 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரை அடுத்து ரக்சிதா, அசீம், ஆயிஷா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஏடிகே மற்றும் மகேஸ்வரி குறைந்த வாக்குகள் பெற்று இருந்தாலும் இவர்களை விட குறைந்த வாக்குகளை அசல் பெற்று இருப்பதால் அவர் இந்த வாரம் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மாடல் அழகி நிவாஷினியுடன் நெருக்கமாக இருந்த அசல், இந்த நிகழ்ச்சி முடிவதற்குள் அவருடன் இன்னும் நெருக்கம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் இந்த வாரம் வெளியேற இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.