விஜய் டிவியில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியேற யார் காரணம்?

நடிகை வனிதா விஜயகுமார் திடீரென விஜய் டிவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தன்னுடைய வெளியேற்றத்திற்கு ஒரு சீனியர் நடிகை தான் காரணம் என்பது போல் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் எனது காளி அவதாரத்துக்குப் பாராட்டுகளும், ஆதரவும் தந்த அனைவருக்கும் எனது நன்றி. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு நான் வெளியேறுகிறேன். நான் உருவாக்கிய தாக்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஒருவர் கொடுமைப்படுத்துவதை, துன்புறுத்துவதை ஏற்க முடியாது. அது யாராக இருந்தாலும் சரி.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவி எனது குடும்பமாகிவிட்டது. குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். எங்களுக்குள் நல்ல மரியாதை உண்டு. அது எப்போதுமே நீடிக்கும் என நினைக்கின்றேன். ஆனால் பணிசெய்யும் இடத்தில் தொழில்முறை அல்லாது, நெறிமுறையற்ற நடத்தையை ஏற்கவே முடியாது. ஒரு மோசமான நபரால் நான் துன்புறுத்தப்பட்டதோடு அவமானப்படுத்தப்பட்டேன், இதற்கு அவரது திமிர் காரணமாக இருக்கலாம், அல்லது அவரால் எனது தொழில் வளர்ச்சியை ஏற்க முடியாமல் இருக்கலாம்.

வேலை செய்யும் இடத்தில் பெண்களை ஆண்கள் மட்டும் மோசமாக நடத்துவதில்லை, பெண்களும் தான் மோசமாக நடத்துகின்றனர், பொறாமை காரணமாக நமக்கு வரும் வாய்ப்புகளை நாசமாக்குகின்றனர். இருப்பினும் நான் எனது திரைப்பட வேலைகளில் பிசியாக இருப்பதால் தொடர்ந்து நீங்கள் என்னைத் திரைப்படங்களில் பார்க்கலாம்.

என்னை விட எல்லா விதத்திலும் மூத்த நபர், கடுமையாக உழைத்து முன்னேறியவர், முன்னேறக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் கீழ்மையாகப் பார்ப்பதும், அவர்களது ஊக்கத்தைக் கெடுத்து அவமானப்படுத்துவதையும் பார்க்க வேதனையாக இருக்கிறது. குறிப்பாக நீண்ட நாட்களின் போராட்டத்துக்குப் பின், குடும்பத்தின், கணவரின் ஆதரவு இல்லாமல் சாதிக்கும், வெற்றி காணும், 3 குழந்தைகளின் தாயை இப்படி நடத்துகிறார். பெண்கள், சக பெண்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மாறாக அவர்களின் வாழ்க்கையை மோசமாக மாற்றக் கூடாது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விடை பெறுவது வருத்தம் தான். மற்ற அத்தனை போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்.

வெற்றி மட்டுமே முக்கியமல்ல. போட்டியில் பங்கேற்று, சவாலை ஏற்பதே மிக முக்கியம். சுரேஷ் சக்ரவர்த்தி, மன்னித்துவிடுங்கள். எனக்கு எது சரியோ அதை நான் செய்தாக வேண்டும். என்னால் நீங்களும் இந்த நிகழ்ச்சியை விட்டு நீங்க வேண்டியதாகிவிட்டது’ என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

More News

ஒன்றிய அரசின் "நியூட்ரினோ ஆய்வு நாசகாரத்திட்டம்" முறியடிக்கப்பட வேண்டும்....! தமிழக அரசிற்கு சீமான் வலியுறுத்தல்....!

ஒன்றிய அரசின் "நியூட்ரினோ ஆய்வு நாசகாரத்திட்டம்" முறியடிக்கப்பட வேண்டும்....! தமிழக அரசிற்கு சீமான் வலியுறுத்தல்....!

'இந்தியன் 2' விவகாரம்: இயக்குநர் ஷங்கருக்கு எதிரான லைகாவின் மனுக்கள் தள்ளுபடி!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த 'இந்தியன் 2' படம் குறித்த வழக்கில் லைகா நிறுவனம் தாக்கல் செய்த இரண்டு இடைக்கால மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன

சட்டம் சுதந்திரத்தை காப்பதற்காகவே, குரல்வளையை நெறிக்க அல்ல: சூர்யா

சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக... அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல என ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

பொம்மை குதிரையில் விளையாடும் இந்தக் குட்டி பாப்பா தமிழ் சினிமா நடிகை… யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா ஜெரெமையா இயக்குநர்

"ஸ்டாலின் தான் வராரு" பாடல் இசையமைப்பாளருக்கு திருமணம்.....! முதல்வர் நேரில் சென்று வாழ்த்து....!

திமுக- வின் "ஸ்டாலின் தான் வராரு" என்ற பாடலை இசையமைத்த, ஜெரார்டு ஃபெலிக்ஸ்-ன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர், தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறினார்.