டி20  இந்தியக் கிரிக்கெட் அணிக்கு அடுத்த கேப்டன் யார்? கசிந்த ரகசியம்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் தற்போது துவங்கியுள்ளது. இந்தத் தொடரின்போது இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக விராட் கோலி, மெண்டராக மகேந்திர சிங் தோனி, பயிற்சியாளராக ரவி சாஸ்திரி ஆகியோர் செயல்படுகின்றனர்.

ஆனால் விராட் கோலி டி20 உலகக்கோப்பை தொடருக்குப்பின் டி20 அணிக்கான கேப்டன்சி பதவியில் இருந்து விலகிவிடுவதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து அடுத்த கேப்டன் யார்? என்ற ஆர்வம் இப்போதே ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டுவிட்டது. இந்நிலையில் தற்போது துணை கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா டி20 அணிக்கு அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறிவந்தனர்.

சமீபத்தில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் ரோஹித் சர்மா டி20 இந்தியக் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டி20 உலகக்கோப்பை தொடர் முடிவுற்ற பின்பு அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டி20 அணியின் துணை கேப்டன் யார்? என்பதற்கான அடுத்த கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்தப் பதவியில் கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் ரிஷப் பந்தின் பெயரும் அடிபடுகிறது. இதனால் துணைக் கேப்டன் யார் என்பதை கணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் கேப்டன் பதவியில் ரோஹித் சர்மா நியமிக்கப்படுவார் என்பதற்கான அஸ்திவாரம் இன்றே துவங்கிவிட்டது. காரணம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இரண்டாவது பயிற்சி ஆட்டம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்றது. இந்தப் பயிற்சி ஆட்டம் ரோஹித் சர்மா தலைமையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

More News

லேட்டஸ்ட் அவுட் ஃபிட்டில் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிதி அகர்வால்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நிதி அகர்வால்.

விவாகரத்து விவகாரம்: சமந்தா பதிவு செய்த அவதூறு வழக்கால் பரபரப்பு!

நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை சட்டப்படி விவாகரத்து செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து தமிழ் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அபிஷேக்கை கொளுத்தி போட்ட அண்ணாச்சி: டென்ஷன் ஆன சிபி!

அபிஷேக்கை கொளுத்திப் போடும் நபர் என அண்ணாச்சி கூறியதை அடுத்து சிபி டென்ஷனான காட்சிகளின் வீடியோ இன்றைய முதல் புரோமோவில் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே வழங்குவது எப்போது? தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பதும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்

பிக்பாஸ் நாடியா சாங் சம்பளம் எவ்வளவு? அவரே அளித்த பதில்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேற்றப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பெண் நாடியா சிங் அவர்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளார்